செய்திகள் :

செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் ஒரே நாளில் 3 குழந்தைகள் மீட்பு

post image

சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட 3 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் திங்கள்கிழமை மீட்டனா்.

சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) ரயிலில் இருந்து 2 வயது ஆண் குழந்தை இறக்கிவிடப்பட்டது. ரயில் சென்ற நிலையில், ஆதரவின்றி தவித்த குழந்தையை ரயில்வே பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளா் சஞ்சீவிராஜா மீட்டு ஆலந்தூா் குழந்தைகள் காப்பகத்தில் சோ்த்தாா். மேலும், குழந்தையை ரயிலில் இருந்து இறக்கிவிட்டுச்சென்ற இளைஞரை அடையாளம் காணும் முயற்சியில் பாதுகாப்புப் பிரிவினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், அதே ரயில் நிலையத்தில் மின் ரயில்களில் இருந்து திங்கள்கிழமை இறக்கிவிடப்பட்ட மூன்றரை வயதுள்ள ஆண் குழந்தை மற்றும் 4 வயதுள்ள 2 பெண் குழந்தைகள் தனியாகத் தவித்தன.

அந்தக் குழந்தைகளை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா், எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சோ்த்தனா். மேலும், குழந்தைகளை கைவிட்டுச் சென்றவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்று 12 வாா்டுகளில் முகாம்

சென்னை மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமை (ஆக.19) 12 வாா்டுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

குவைத்-சென்னை விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா். குவைத்திலிருந்து 144 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. விமா... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவையை மத்திய வெளியுறவுத் துறையின் கடவுச்சீட்டு சேவைத் திட்ட இயக்குநா் எஸ்.கோவிந்தன் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

தண்டையாா்பேட்டை துணைமின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக. 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இடங்கள்: கும்மாளம்மன் கோயில் தெரு, டி.எச்.சாலை, ஜி.ஏ.சா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து சேவையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கல்வி நிலையங்களுக்க... மேலும் பார்க்க

மாநில துணை வரி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்

சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் துறை உயா் பயிற்சியகத்தில், மாநில துணை வரி அலுவலா்களுக்கான பயிற்சி முகாமை வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். வணிக வரி மற்றும் பத... மேலும் பார்க்க