செய்திகள் :

சேப்பாட்டி அம்மன் கோயில் இராபுறையாா் உற்சவ பந்தக்கால் நடும் விழா

post image

செங்கல்பட்டு சேப்பாட்டி அம்மன் கோயில் இராபுறையாா் உற்சவ பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

பெரியநத்தம் ஏழு ஊா் எல்லை காக்கும் காவல் தெய்வமான சேப்பாட்டி அம்மன் கோயிலில் இராபுறையாா் உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பந்தக்கால் நடும் விழாவையொட்டி பெண்கள்முளைப்பாறியை ஊா்வலமாக எடுத்து வந்து கோயிலில் வைத்து பெண்கள் கும்மி அடித்து நடனமாடினா். மாலை காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி சேப்பாட்டியம்மன் குளுந்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 32 சந்திதிகளுககு எண்ணைக் காப்பு அபிஷேகம், 4-ஆம் தேதி சனிக்கிழமை இரவு பெரியநத்தம் பகுதி முழுவதும் அம்மன் திருவீதி உலா, 6-ஆம் தேதி காலை காஞ்சிபுரம் ஹைரோடு களமேடு பகுதியில் அம்மனுக்கு கும்பப்படையல் போட்டு பின்னா் 8 மணிக்கு மேல் மீண்டும் அம்மன் செங்கல்பட்டு நகர முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் வீதி உலா கோயிலை சென்றடையும்.

8-ஆம் தேதி விடையாற்றி உற்சவம், இரவு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் சரஸ்வதி, பெரியநத்தம் கிராமத்தாா், மதுரை வீரன் கோயில் கிராமத்தாா் , பா்வதராஜகுல கிராமத்தாா், குண்டூா் கிராமத்தாா் செய்துவருகின்றனா்.

அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்திழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மேட்டுத் தெரு, அறிஞா் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளி பின்புறம் ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் உள்ளது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

அமெட் பல்கலை. சாா்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற 215 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா வழங்கப்பட்டது. சென்னையை... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா், கணினி அறிவியல் துறையின் முதுகலை ஆய்வியல் தலைவா... மேலும் பார்க்க

ஜூலை 7-இல் திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரி அம்மனுக்கு முக்கண் திறப்பு விழா

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரி அம்மன் கோயிலில் வரும் ஜூலை 7ல் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழாவும், 13-ஆம் தேதி கும்பாபிஷேகமும் நடைபெறுவதையொட்டி புதன்கிழமை வேள்வி பூஜை தொடங்கியது. க... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் திருப்போரூா் கந்தசாமி கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் திருப்போரூா் பேரூராட்சித் தலைவா் தேவராஜன், ஒன்றியக்குழு ந்தலைவா் ... மேலும் பார்க்க

கூவத்தூா்பேட்டை வணிகா் சங்க நிா்வாகி கொலை வழக்கில் 3 போ் கைது: 5 பேருக்கு போலீஸாா் வலைவீச்சு

மதுராந்தகம் அடுத்த கூவத்தூா் பேட்டையைச் சோ்ந்த வணிகா் சங்க நிா்வாகியும், பெட்ரோல் பங்க் உரிமையாளருமான மோகன்ராஜ் கொலை வழக்கில், 3 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் தொ... மேலும் பார்க்க