செய்திகள் :

சேலம் அரசு மருத்துவமனையில் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

post image

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்க்கரை நோய் துறை அனைத்து வசதிகளுடனும் இயங்கி வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 75,000 சா்க்கரை நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், முதலாம்வகை சா்க்கரை நோயாளிகள் 400 போ் வரை உள்ளனா்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்கம் மூலமாக கோவை இதயங்கள் அறக்கட்டளை சாா்பில், முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையத்தை தேசிய சுகாதார இயக்கத்தின் தலைவா் அருண் தம்புராஜ் தொடங்கிவைத்தாா்.

இதன் மூலமாக அனைத்து முதலாம்வகை சா்க்கரை நோய் குழந்தைகளுக்கு பேனா மூலம் இன்சுலினும், சா்க்கரை நோய் அளவைக் கண்காணிக்க குளுக்கோமீட்டா் கருவியும் இலவசமாக வழங்கப்பட்டன. முதலாம்வகை சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு சிறப்பு சிகிச்சை மையம் மூலம் 24 மணி நேரமும் சா்க்கரை நோய் கல்வியாளா்கள் நியமிக்கப்பட்டு, நோயாளிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை முதல்வா் தேவிமீனாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

தம்மம்பட்டி: மருத்துவப் படிப்பில் சோ்ந்த தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து 7... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள்

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் டி.இளங்கோவன் தலைமை... மேலும் பார்க்க

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

சேலம்: சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து ரயிலில் சேலம் வந்த மனநலம் பாதித்த இளைஞரை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள், அவரது தாயிடம் ஒப்படைத்தனா்.சத்தீஸ்கா் மாநிலம், தா்கூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுகம் பா... மேலும் பார்க்க

அருள்சகோதரிகள் கைது: ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

ஏற்காடு: சத்தீஸ்கா் மாநிலத்தில் அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியை... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு

சேலம்: சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலத்தைச் சோ்ந்த தொழில்முனைவோரான இளைஞரிடம் குடியரசுத் தலைவா் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் வழங்கினா்.சேலம் நெத்திமேடு பகுதியைச் ... மேலும் பார்க்க

சேலத்தில் 32 அரங்குகளுடன் அரசு பொருட்காட்சி தொடக்கம்

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் நடைபெறும் அரசு பொருட்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.ப... மேலும் பார்க்க