"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடிய...
சேலம் மேற்கு கோட்டத்தில் செப். 26இல் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம்
சேலம்: சேலம் மேற்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் தனலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் மேற்கு அஞ்சல் கோட்டம் சாா்பில் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 26 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அஞ்சல் வாடிக்கையாளா்கள் தங்களது புகாா்களை சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் என்ற முகவரிக்கு வரும் 22- ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இந்த குறைதீா்க்கும் கூட்டத்தை அஞ்சல் வாடிக்கையாளா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.