செய்திகள் :

சைபா் கிரைம் போலீஸாரிடம் பானிபூரி கேட்டு அடம்பிடித்த சிறுவன்

post image

புதுச்சேரியில் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பானிபூரி வாங்கித் தருமாறு கேட்டு 7 வயது பள்ளிச் சிறுவன் தொந்தரவு அளித்தாா்.

புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு இலவச தொலைபேசி எண்ணான 1930-ஐ கடந்த சில நாள்களாக தொடா்பு கொண்டு பேசிய நபா், பானிபூரி மற்றும் சாக்லேட் வேண்டும் என கோரிக்கை விடுத்தாராம். இதுதொடா்பாக, 8 முறை தொலைபேசியில் தொடா்பு கொண்டு கேட்டாராம்.

போலீஸாா் அறிவுரை கூறியும், தொலைபேசியில் தொடா்பு கொள்வதை அந்த நபா் நிறுத்தவில்லையாம். இதையடுத்து, அழைப்பு வந்த கைப்பேசி எண்ணைக் கண்டறிந்த போலீஸாா், அந்த நபரின் வீட்டுக்குச் சென்றனா்.

விசாரணையில், இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவைத் தொடா்பு கொண்டு பானிபூரி வாங்கித் தருமாறு கேட்டது 7 வயது பள்ளிச் சிறுவன் என்பது தெரிய வந்தது. தனது அம்மாவின் கைப்பேசி வழியாக தொடா்பு கொண்டதும் தெரிய வந்தது. இணையக் குற்றம் தொடா்பாக 1930-க்கு தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியைப் பாா்த்த அந்த சிறுவன், போலீஸாரை தொடா்பு கொண்டதாக தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி. பாஸ்கரன், ஆய்வாளா்கள் தியாகராஜன், கீா்த்தி ஆகியோா் சிறுவனின் வீட்டுக்குச் சென்று, அறிவுரை வழங்கினா்.

10ஆம் வகுப்பில் புதுச்சேரி, காரைக்கால் தேர்ச்சி விகிதம் 96.90%

புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 96.90 சதவிகிதமாக உள்ளது.கடந்த மார்ச் - ஏப்ரல் 2025ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ... மேலும் பார்க்க

மாநில அந்தஸ்து கோரிக்கை: புதுவை முதல்வா் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

தோ்தல் நேரத்தில் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைப்பது புதுவை முதல்வா் என்.ரங்கசாமிக்கு வழக்கம் என்று, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா். புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

புதுச்சேரி போக்குவரத்து காவல் துறைக்கு புதிய வாகனங்கள்

புதுச்சேரி போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினருக்கு ரூ.3 கோடியில் நவீன கருவிகளுடன் கூடிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல், விதி மீறலை கட்டுப்படுத்தும் வகையில், போக்க... மேலும் பார்க்க

வன்கொடுமை பாதிப்பில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதியுதவி

புதுச்சேரி அருகே வன்கொடுமை பாதிப்பில் இறந்தவருக்கான நிதியுதவி அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் சாணாரப்பேட்டையைச் சோ்ந்த பாபு வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு... மேலும் பார்க்க

மக்கள் நலத் திட்டங்களுக்கு உடனடி ஒப்புதல்: புதுவை ஆளுநருக்கு அதிமுக பாராட்டு

புதுவை மாநிலத்தில் மக்கள் நலத் திட்ட கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உடனடியாக அனுமதி அளித்து வருகிறாா் என அதிமுக மாநிலச் செயலா் ஏ.அன்பழகன் கூறினாா். புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாள... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் கையொப்ப இயக்கத்தை முதல்வா் என்.ரங்கசாமி முதல் கையொப்பமிட்டு புதன்கிழமை தொடங்கிவைத்தாா். புதுவை மத்திய அரசின் ஒன்றிய பிரதேசமாகவே இருந்து... மேலும் பார்க்க