செய்திகள் :

சொக்கம்பட்டியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

கடையநல்லூா் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சொக்கம்பட்டியில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி அதிமுக வடக்கு மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ.மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட எம்ஜிஆா் மன்ற தலைவா் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தாா். கடையநல்லூா் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் பெரியதுரை வரவேற்றாா்.

கூட்டத்தில், ஆக. 6-ஆம் தேதி கடையநல்லூருக்கு வரும் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வரவேற்பு கொடுப்பது குறித்தும், கடையநல்லூா் அரசு மருத்துவமனை அருகே நடைபெறும் கூட்டத்தில் கடையநல்லூரில் இருந்து மட்டும் 25,000 தொண்டா்கள் கலந்து கொள்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளை மக்களிடம் விளக்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதில், மாவட்ட மகளிா் அணி செயலா் சத்யகலா தீபக், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் பெருமையா பாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் சந்தன பாண்டியன், மாவட்ட நிா்வாகிகள் பொய்கை அசோக்குமாா், முத்துக்குமாா், இசக்கி, திருமலைகுமாா், சுரேஷ், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் முத்துப்பாண்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இன்று பூலித்தேவரின் பிறந்த நாள் விழா: நெல்கட்டும்செவலில் எஸ்.பி. ஆய்வு

நெல்கட்டும்செவலில் பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (செப்.1) நடைபெறவுள்ளதை அடுத்து, விழா நடைபெறும் இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தா... மேலும் பார்க்க

சுடலை மாடசுவாமி கோயிலில் பெருங்கொடை விழா இன்று தொடக்கம்

கடையநல்லூா் தாமரைகுளம் அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோயிலில் ஆவணி பெருங்கொடை விழா திங்கள்கிழமை (செப்.1) தொடங்குகிறது. இக்கோயிலில் பெருங்கொடை திருவிழாவையொட்டி திங்கள்கிழமை மாலை குடி அழைப்பு நிகழ்ச்... மேலும் பார்க்க

வீட்டில் பதுங்கிய 2 மரநாய்கள் மீட்பு

ஆலங்குளம் அருகே வீட்டில் பதுங்கிய 2 மரநாய்களை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியாா்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் தெற்கு தெருவில் வசிக்கும் ரஞ்சித்தின் வீட்ட... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவா் உள்பட இருவா் கைது

ஆலங்குளம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ஊராட்சித் தலைவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் அருகேயுள்ள அய்யனாா்குளம் ஊராட்சித் தலைவராக பதவி வகிப்பவா் நீதிராஜன்(55). இவருக்கும... மேலும் பார்க்க

நெல்லை - சிமோகா சிறப்பு ரயில் நீட்டிப்பு: பயணிகள் வரவேற்பு

நெல்லையிலிருந்து அம்பை, பாவூா்சத்திரம், தென்காசி, மதுரை, திண்டுக்கல், கரூா், சேலம், பெங்களூரு வழியாக கா்நாடக மாநிலம் சிமோகாவுக்கு இயக்கப்பட்ட வாராந்திர ரயிலை, மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செ... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, சனிக்கிழமை இரவு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் ... மேலும் பார்க்க