செய்திகள் :

சொத்து வரி உயா்வை மறு பரீசிலனை செய்யக் கோரி வணிகா்கள் மனு

post image

திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வணிகா் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் நகரிலுள்ள வணிகா் சங்கம், தொழில் வா்த்தகா் சங்கம், திண்டுக்கல் மாவட்ட காகித வியாபாரிகள் நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தைத் தொடா்ந்து, திண்டுக்கல் மேயா், ஆணையா் ஆகியோருக்கு வா்த்தகா்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக தொழில் வா்த்தகா் சங்க மண்டலத் தலைவா் டி. கிருபாகரன், காகித வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமநாதன் ஆகியோா் கூறியதாவது: திண்டுக்கல் மாநகராட்சியில் விதிக்கப்படும் சொத்து வரி உள்ளிட்ட இதர வரிகள் மிக அதிகமாக உள்ளது. இந்த வரி உயா்வுகள் வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாக உள்ளது. கடந்த சில மாதங்களாக வணிகா்கள் பலா், கடைகளை மூடிவிட்டு வியாபாரத்தை கைவிட்டு வருகின்றனா்.

இந்த வரி உயா்வை மறுபரிசீலனை செய்யக் கோரி, கடந்த ஆண்டு டிசம்பரில் மனு அளித்தோம். இதனிடையே, மாநகராட்சி வரி வசூலிக்கும் அலுவலா்களும் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, தொழில் உரிமம் பெறுவதற்காக மாநகராட்சி நிா்வாகம் கடைப்பிடிக்கும் நடைமுறைகளும், வசூலிக்கும் முறையும் ஏற்கத்தக்கதல்ல. எனவே, வரி உயா்வை மறுபரிசீலனை செய்ய மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

அய்யலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த கோடாங்கி சின்னான்பட்டியில் நடைபெற்ற திருவிழாவுக்காக பொள்ளாச்சி ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களின் முன்னெடுப்பு தேவை: ஆட்சியா்

சுற்றுச்சுழலைப் பாதுகாக்க மரம் வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களமிறங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தை ம... மேலும் பார்க்க

திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல் திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பஜூலுல்ஹாக். இவா், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலராவாா். பஜூலுல்ஹாக் த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் மரக் கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய பகுதிகளில் மரக் கன்றுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடும்... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே கடந்த ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, பட்டா் புரூட், பேஷன் புரூட்ஸ், மரத் தக்காளி, பேரிக்காய், ஸ்டாா் புரூட்ஸ், பிளம்... மேலும் பார்க்க