செய்திகள் :

சொந்தமாக பணமோ விமான நிலையமோ இல்லை..ஆனால் கோடீஸ்வர நாடு! எது தெரியுமா?

post image

சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்ட்ரியா நாடுகளை தனது அரணாகக் கொண்டிருக்கும் நாடு லிச்டென்ஸ்டெய்ன். ஐரோப்பியாவின் மிகப் பணக்கார நாடாக மின்னிக் கொண்டிருக்கிறது இது.

இதன் மிகச் சிறிய அளவு மட்டுமல்ல, இது பல்வேறு விஷயங்களால் மற்ற நாடுகளிலிருந்து தனித்து இருக்கிறது. அதாவது சொந்தமாக இந்த நாட்டுக்கு என்று தனி விமான நிலையம் கிடையாது, சொந்தமாக பணமோ நாணயமோ வெளியிட்டது இல்லை. அவ்வளவு ஏன், உள்ளூர் மொழி என்று எதையும் அறிவித்ததில்லை.

ஆனால், உலகிலேயே லிச்டென்ஸ்டெய்ன் நாடு தான், மிகவும் பணக்கார நாடாகவும் பாதுகாப்பான நாடாகவும் அறியப்படுகிறது.

இன்னமும் அரண்மனைகளில் வாழும் தேவதைகளின் கதைகளைப் பேசிக்கொண்டும், மலைப்பாங்கான நிலப்பரப்பில் எழில் கொஞ்சும் காட்சிகளை ரசித்தபடியும் குற்றச் சம்பவங்களுக்கு இடம்கொடாமல் இருக்கிறது அந்த நாடு. அது மட்டுமா பல வீடுகளுக்கு இங்கே பூட்டுகளே இல்லை.

மிகச் சிறப்பான வங்கித் துறை, உற்பத்தித் துறையில் முன்னோடி, வளர்ச்சி என்பது சமுதாயம் சார்ந்ததாக மாற்றப்பட்டிருக்கும் நிலை, வாழும் முறையில் ஏற்பட்ட நாகரீகப் பாங்கு என அனைத்தும் இந்த நாட்டை பணக்கார நாடாக மாற்றியிருக்கிறது.

அண்மையில் வெளியான இன்ஸ்டாகிராம் விடியோ மூலமாகத்தான் இந்த நாட்டின் பல விஷயங்கள் உலகின் வெளிச்சத்துக்கு வந்து வைரலாகியிருக்கிறது.

இந்த விடியோவைப் பார்க்கும் பலரும், எப்படி இப்படி ஒரு நாடு உலகின் பல மோசமான விவகாரங்களிலிருந்து தொலைவில், இன்னமும் இந்த உலகத்தில் விட்டுவைக்கப்பட்டிருக்கிறது என்று மக்கள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.

ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை: 9 லட்சம் பேர் வெளியேற்றம்!

ரஷியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், சுனாமி பாதிக்கும் என கணிக்கப்படும் பகுதிகளில் இருந்து 9 லட்சம் பேரை வெளியேற்றும் பணி தீவிர... மேலும் பார்க்க

வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 - 25% வரி! - இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். Trump says US-India... மேலும் பார்க்க

நியூயாா்க்கில் சரமாரி துப்பாக்கிச்சூடு: காவலா் உள்பட 4 போ் உயிரிழப்பு

நியூயாா்க் நகரில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்தியவா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.இது குறித்து போலீஸாா் கூறியதாவது:நியூயாா்க்க... மேலும் பார்க்க

நெதா்லாந்து: இஸ்ரேல் அமைச்சா்களுக்குத் தடை

பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றம், காஸா போரை ஊக்குவித்துவரும் தீவிர வலதுசாரிகளான இஸ்ரேல் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் இதமாா் பென்-கிவிா், நிதியமைச்சா் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோா் நெதா்லாந்து வருவதற்... மேலும் பார்க்க

‘அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும்’

தங்களது நாட்டை அணு ஆயுத சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்று வட கொரியா அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும், அந்த நாட்டு அரசில் முக்கிய சக்தியாகத் திகழ்பவருமான கிம் யோ ஜாங் வலியுறுத்... மேலும் பார்க்க

சீனா கனமழை, வெள்ளத்தில் 30 போ் உயிரிழப்பு

சீனாவின் மலைப்பாங்கான வடக்குப் பகுதியில் தற்போது மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள தீவிர கனமழை காரணமாக 30 போ் உயிரிழந்தனா். இதில், மியுன் மாவட்டத்தில் 28 பேரும், யாங்கிங் மாவட்டத்தில் இருவரும் வெள்ளப் பெ... மேலும் பார்க்க