செய்திகள் :

பெங்களூரு: அதிகாலையில் நடைப்பயிற்சி செய்த முதியவர்; கடித்துக் கொன்ற தெரு நாய்கள்; என்ன நடந்தது?

post image

பெங்களூருவில் முதியவர் ஒருவரை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவில் உள்ள கொடிகேகல்லி என்ற இடத்தில் வசித்தவர் சீத்தப்பா (70). இவர் இரவில் சரியாக உறக்கம் வராமல் திணறிக்கொண்டிருந்தார்.

இதனால் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சிக்குச் சென்று வரலாம் என்று நினைத்து சீத்தப்பா தனது வீட்டை விட்டு வெளியில் வந்தார். அவரது வீட்டிற்கு வெளியில் தெருநாய்கள் அதிக அளவில் நின்று கொண்டிருந்தன.

தெரு நாய்கள்
தெரு நாய்கள்

அவர் வெளியில் வந்த நேரத்தில் இருட்டு அதிகமாக இருந்தது. சீத்தப்பா வந்தவுடன் தெரு நாய்கள் அவரைச் சுற்றி வளைத்துத் தாக்க ஆரம்பித்தன. இதனால் உதவி கேட்டு சீத்தப்பா கத்தினார். வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர்.

வெளியில் தெரு நாய்கள் சீத்தப்பாவைச் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தன. அவற்றை அடித்து விரட்டிவிட்டு சீத்தப்பாவை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சீத்தப்பாவின் உடம்பில் நாய்க் கடிகளால் கைகள், கால்கள் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது, சதைப் பகுதிகள் கிழிந்தன. இதனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற்னார். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்து என்ன நடந்தது என்பதை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் சுற்றித்திருந்த 15 தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றுள்ளனர். கடந்த வாரம்தான் கர்நாடகாவின் ஹூப்லியில் 3 வயது சிறுமியை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் குதறியது.

நாய்

இதில் சிறுமி படுகாயம் அடைந்தார். பெங்களூருவில் தெரு நாய்களுக்கு சிக்கன் சாப்பாடு வழங்கும் திட்டத்தை மாநகராட்சி அறிவித்து இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தினமும் 4 முதல் 5 ஆயிரம் தெரு நாய்களுக்குச் சமைத்த சிக்கன் சாப்பாடு வழங்கப்படும். இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தலைக்கேறிய மது போதை; இளைஞரைக் கொன்று எரித்த நண்பர்கள்... கோவையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சுரேஷ்குமார் (28). இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்களான ரகுபதி (24), முத... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அடையாளம் கண்ட போலீஸ்!

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரோஸி (40) இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து நேற்று மாலை வீட்டுக்குச் செல்ல பெருங்குடி ரயில் நிலையத்தில் க... மேலும் பார்க்க

சென்னை: ஆட்டோ டிரைவர் கொலை - உறவினர் உட்பட 3 பேர் கைது!

சென்னை, தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெருவில் வசித்தவர் அருண்மொழி (31). இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். கடந்த 29.07.2025-ம் தேதி தண்டையார்பேட்டை, முண்ட கண்ணியம்மன் கோயில் அருகே அருண்மொழி நின்று... மேலும் பார்க்க

Meghalaya Honeymoon Horror: திரைப்படமாகும் மேகாலயா தேனிலவு கொடூரம்!

மேகாலயாவில் கடந்த மே மாதம் தேனிலவுக்கு சென்ற ராஜா ரகுவன்சியை அவரது மனைவி தனது காதலன் துணையோடு அடியாட்களை வைத்து கொலை செய்தார். இப்படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மா... மேலும் பார்க்க

சென்னை கல்லூரி மாணவன் கார் ஏற்றி கொலை - திமுக பிரமுகர் தனசேகரனின் பேரன் கைது பின்னணி

சென்னை, அயனாவரம், முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர், நித்தின் சாய் ( 20). இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவரின் நண்பன், அயனாவரம் பி.இ., கோய... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா; எட்டி உதைத்துத் தள்ளிய பேத்திகள்; போக்சோ வழக்கில் முதியவருக்குச் சிறை

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு 19 வயதிலும் 11 வயதிலும் இரண்டு மகள்கள். கணவர் வெளிநாட்டில் வேலை செய்ததால் 74 வயதான மாமனாரும் அந்த வீட்டில் வசித்து வந்தார்.கைதுதினமும் ... மேலும் பார்க்க