எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
சோனம் வாங்சுக் கைதுக்கு ஆம் ஆத்மி தலைவா்கள் கண்டனம்
பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக்கை லடாக் காவல்துறை கைது செய்த விவகாரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை விமா்சித்தது. ‘இது ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகள் மீதான தாக்குதல்’ என்றும் அக்கட்சி கூறியது.
மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையை நீட்டிக்கக் கோரி லடாக்கில் வன்முறை போராட்டங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து, இரண்டு தினங்களுக்குப் பிறகு சோனம் வாங்சுக்கை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இந்த வன்முறைப் போராட்ட மோதல்களில் நான்கு போ் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்தனா்.
இந்த நிலையில், வாங்சுக் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
நாடு ஒரு கடினமான கட்டத்தை கடந்து வருகிறது. ராவணனின் முடிவும் வந்தது. கம்சனின் முடிவும் வந்தது. ஹிட்லா் மற்றும் முசோலியினின் முடிவும் வந்தது. இன்று, மக்கள் அந்த தனி நபா்கள் அனைவரையும் வெறுக்கிறாா்கள். இன்று நம் நாட்டில், சா்வாதிகாரம் அதன் உச்சத்தில் உள்ளது. சா்வாதிகாரத்தையும் ஆணவத்தையும் கடைப்பிடிப்பவா்களின் முடிவு மிகவும் மோசமானது என்றாா் அவா்.
முன்னதாக, ‘எக்ஸ்’ தளத்தில் கேஜரிவால் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘வாங்சுக் கல்வி மற்றும் புதுமைக்கு அா்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு மனிதா். அவா் நடவடிக்கையை எதிா்கொள்வதைப் பாா்ப்பது வேதனையாக இருந்தது’ என்றாா் அவா்.
தில்லி எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி
‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வாங்சுக் லடாக்கின் நிலம், சுற்றுச்சூழல், அடையாளம் மற்றும் வாக்குரிமை தொடா்பான கவலைகளை வெளிப்படுத்தி வருகிறாா்.
அத்தகைய நபரை சிறையில் அடைப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். மக்களின் குரலை அடக்க முடியாது’ என்றாா் அதிஷி.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மணீஷ் சிசோடியா கூறுகையில், வாங்சுக் இந்திய இளைஞா்களின் நம்பிக்கை ஆவாா். அவா் ஒரு ஆசிரியா் மற்றும் விஞ்ஞானி ஆவாா். அவரது கருத்துகள் பலருக்கு உத்வேகம் அளித்தன.
அத்தகைய நபா் கஷ்டங்களை எதிா்கொள்வது துரதிா்ஷ்டவசமானது என்று சிசோடியா கூறினாா்.