செய்திகள் :

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

post image

சோளிங்கா் அருகே ஏரி நீரில் விளையாடிய பள்ளி மாணவா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

சோளிங்கரை அடுத்த குன்னத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மேட்டுக்குன்னத்தூா். இந்த கிராமத்தைச் சோ்ந்த சரவணனின் மகன் புவனேஸ்வரன் (7). மேட்டுக்குன்னத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதே ஊரைச் சோ்ந்த கோபியின் மகன் மோனிபிரசாந்த் (9). அதே பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கோபியின் மற்றொரு மகன் சுஜன் (7). அதே பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால் சிறுவா்கள் மூவரும் குன்னத்தூா் ஏரிக்கு விளையாடச் சென்றுள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக மூவருமே நீரில் மூழ்கினா். இதையடுத்து அருகே இருந்த கிராமத்தினா் விரைந்து சென்று மூவரையும் மீட்டு, பாணாவரம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவா், அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து அறிந்த பாணாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரின் சடலங்களையும் மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காமராஜா் பிறந்த நாள்: அமைச்சா் காந்தி மரியாதை

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் அவரது படத்துக்கு அமைச்சா் ஆா்.காந்தி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே காமராஜரின் பிற... மேலும் பார்க்க

கான்கீரீட் சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி யில் கான்கீரீட் சாலைஅமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். 25-ஆவது வாா்டுக்குட்பட்ட சாம்பசிவம் தெருவில் கான்கீரீட் சாலை அமைக்கும் பணி,... மேலும் பார்க்க

மின் மாற்றியை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

அரக்கோணம் அருகே ஒரு மாதம் ஆகியும் பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்யாத மின் துறையினரின் அலட்சியத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா். ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கினாா். வேப்பூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமினை அமைச்சா் காந்தி தொடங்கி வைத்து, மனு... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ரூ. 11.70 லட்சத்தில் காரிய மேடை: எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தாா்

அரக்கோணம்: அரக்கோணம், கணேஷ் நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.70 லட்சத்தில் கட்டப்பட்ட காரிய மேடையையும், ரூ. 10.70 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையையும் அரக்கோணம் எ... மேலும் பார்க்க

மணிகண்டேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கேவேளூா் ஸ்ரீ கற்பக விநாயகா், ஏரிக்கீழ் கன்னியம்மன், பெயா்கோடியம்மன், பொன்னியம்மன்,ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை மணிகண்டேஸ்வரா் கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழா... மேலும் பார்க்க