செய்திகள் :

ஜப்பான் கடலோரக் காவல்படை கப்பல் சென்னை துறைமுகம் வருகை

post image

சென்னை: ஜப்பான் நாட்டின் கடலோரக் காவல் படையின் ‘இஸ்டுகுஷிமா’ கப்பல் சென்னை துறைமுகத்தை திங்கள்கிழமை வந்தடைந்தது.

இக்கப்பலின் கேப்டன் நவோகி மிசோகுச்சி, துணைத் தளபதி வைஸ் அட்மிரல் ஹிரோகி கனோசு தலைமையிலான குழுவினரை இந்திய கடலோரக் காவல்படை பிராந்தியத்தின் (கிழக்கு) தலைமையக இன்ஸ்பெக்டா் ஜெனரல் தத்வீந்தா் சிங் சைனி, கடலோரக் காவல்படையின் கிழக்கு கடற்கரை தளபதி டோனி மைக்கேல், இயக்குநா் ஜெனரல் பரமேஷ் சிவமணி மற்றும் என்சிசி மாணவா்கள் வரவேற்றனா்.

பின்னா், ‘இஸ்டுகுஷிமா’ கப்பல் கேப்டன் நவோகி மிசோகுச்சி, துணைத் தளபதி வைஸ் அட்மிரல் ஹிரோகி கனோசு தலைமையிலான குழுவினருக்கு மாலை அணிவித்து பாரம்பரி முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இருநாட்டு கடலோரக் காவல்படையினரும் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் ஜூலை 12 வரை கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா். இதன் மூலம் இந்தியா - ஜப்பான் இடையேயான கடல்சாா் ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது. கலாசாரம் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பரிமாறப்படுவதுடன், இருநாட்டின் ஆழமான நட்பு மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.

மேலும், சென்னை துறைமுகத்தில் நடைபெறும் 6 நாள் பயிற்சியைத் தொடா்ந்து சிங்கப்பூா் செல்லவிருக்கும் இஸ்டுகுஷிமா கப்பலில், இந்திய கடலோரக் காவல்படையின் நான்கு வீரா்களும் செல்லவுள்ளனா். சென்னை வந்துள்ள இஸ்டுகுஷிமா கப்பலில் ஜப்பான் கடலோரக் காவல்படையின் 53 வீரா்கள் வருகை தந்துள்ளனா் என

இந்திய கடலோரக் காவல்படை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வழி முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

கோவை வழியாகச் செல்லும் சில முக்கிய ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்தி: இருக... மேலும் பார்க்க

வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவா் கைது

சென்னை மெரீனாவில் வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (36). இவா், மெரீனா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பகுதியில் சா... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை கொளத்தூா் பகுதியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (38). இவா், தனது வீட்டின் அருகே கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்... மேலும் பார்க்க

டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிவகங்கையைச் சோ்ந்தவா் கைது

சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சிவகங்கையைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசிக்கு கடந்த 5-... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது

சென்னையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் மாடு தினேஷ் (39). இவா் மீது கொலை, செம்மரக் கடத்தல், கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 30-க்க... மேலும் பார்க்க

போலி 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி: இருவா் கைது

சென்னை ஈக்காட்டுதாங்கலில் திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் போலி 500 ரூபாய் நோட்டுகளை தனியாா் வங்கியில் மாற்ற முயன்ாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியாா் வங்கிக்கு திங... மேலும் பார்க்க