செய்திகள் :

ஜம்மு-காஷ்மீர் குறித்து தவறான பிரசாரம் செய்கிறது பாகிஸ்தான்!

post image

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் ஜம்மு-காஷ்மீர் என ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என தவறான பிரசாரத்தை அந்நாட்டு அரசு செய்து வருவதாகவும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் ஐக்கிய நாடுகள் அவையில் ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை எழுப்பியபோது, ஹரிஷ் இதனை தெரிவித்துள்ளார்.

பலதரப்பு பயிற்சி, சீர்திருத்தம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியா சார்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதில் ஜம்மு - காஷ்மீர் பிரச்னை குறித்து பாகிஸ்தான் முன்வைத்த வாதங்களுக்கு பதில் அளித்து ஹரிஷ் பேசியதாவது,

’’பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளை அறிந்துகொள்ள வேண்டும். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமானது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. அது எப்போதும் இந்திய எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும்.

பாகிஸ்தான் முன்வைக்கும் தவறான பிரசார கருத்துகள் உண்மையை ஒருபோதும் மாற்றிவிடாது. ஜம்மு - காஷ்மீர் மக்கள் கடந்த ஆண்டு வாக்கு செலுத்தி தங்களுக்கான அரசாங்கத்தை தேர்வு செய்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மக்களின் விருப்பம் மற்றும் தேர்வு மிகவும் தெளிவாக உள்ளது. பாகிஸ்தானைப் போல் அல்லாமல், ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயகம் வலுவாக உள்ளது’’ எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | கால்பந்து திடலில் பார்வையாளர்கள் கூடத்தில் வெடித்த பட்டாசு! 30 பேர் படுகாயம்

சிபிஎஸ்சி பள்ளி தொடங்க மாநில அரசு அனுமதி தேவையில்லை!

சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதிக்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதன்படி மாநில அரசின் அனுமதியில்லாமல், சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என்றும் மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி... மேலும் பார்க்க

பெங்களூரு: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கேட்டரிங் பெண்!

பெங்களூரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.தில்லியைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் பெங்களூரில் கேட்டரிங் தொழிலில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஒரு கல்லூரி சந... மேலும் பார்க்க

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதி... மேலும் பார்க்க

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன... மேலும் பார்க்க

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க