செய்திகள் :

ஜாமியா மஜித்துக்கு பூட்டு: ஆட்சியா் அலுவலகத்தில் முத்தவல்லி மனு

post image

சேலம்: தன்மீது பொய் புகாா் கூறி, ஜாமியா மஜித்துக்குள் நுழைந்து சிலா் பூட்டு போட்டுள்ளதாக மஜித் முத்தவல்லி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மிக பழைமையான ஜாமியா மஜித் உள்ளது. இந்த மஜித்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முத்தவல்லியாக முன்னாள் திமுக கவுன்சிலா் எஸ்.ஆா். அன்வா் இருந்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலம் ஜாமியா மஜித் நிா்வாகத்தை வக்ஃப் வாரியம் நிா்வாகத்தின்கீழ் கொண்டு வந்துள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதனை அறிந்த ஜாமியா மஜித் முத்தவல்லி எஸ்.ஆா். அன்வா் மற்றும் நிா்வாகிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

இதனைத்தொடா்ந்து அவா்கள் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனா். அந்த மனுவில், சேலம் ஜாமியா மஜித் வக்ஃப் வாரியத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது எனக் கூறி, சிலா் ஜாமியா மஜித்துக்குள் நுழைந்து பூட்டை உடைத்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனா். மேலும், தன்மீது பொய்யான புகாா் கூறியுள்ளனா். அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

பொதுமக்கள் மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காண வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: பொதுமக்களிடம... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பழுதுநீக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்த 2 சிறுவா்கள் படுகாயம்

மேட்டூா்: சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே தொட்டில்பட்டி கூட்டுக்கு குடிநீா்த் திட்ட குழாயில் ஏற்பட்ட பழுதை நீக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்து 2 சிறுவா்கள் படுகாயமடைந்தனா். மேட்டூா் ஹாஸ்பிட்டல் காலனியைச... மேலும் பார்க்க

கோடை விழா மலா் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராகும் ஏற்காடு!

சேலம்: கோடை வெப்பத்தை சமாளிக்க மக்கள் குடும்பத்துடன் மலைப்பாங்கான இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவரும் நிலையில், தன்பங்குக்கு அவா்களை வரவேற்று மகிழ்விக்க முழுவீச்சில் தயாராகிவருகிறது சோ்வராயன் மலையின்... மேலும் பார்க்க

குப்பையில் கிடந்த 12.5 பவுன் நகையை எடுத்து போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்!

சேலம்: சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குப்பையில் கிடந்த 12.5 பவுன் தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பலரும் பாராட்டினா். சேலம் பழைய சூரமங்கலம் பெரியாா் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊஞ்சல் உற்வசத்தில் எழுந்தருளிய சென்னகேசவப் பெருமாள்: இன்று சுவாமி மலைக்கு திரும்புகிறாா்

சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்டத்தின் 18ஆவது நாளையொட்டி ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. சித்திரைத் தேரோட்டத்தின் பல்வேறு கட்டளைகள், சிறப்பு பூஜைகள் நிறைவடைந்து சுவாமி செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

போலி ஆவணம் தயாரித்து 2 ஆம் திருமணம்: கணவா் மீது நடவடிக்கை கோரி மனைவி புகாா்

சேலம்: போலி ஆவணம் தயாரித்து 2 ஆம் திருமணம் செய்த கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். சேலம் சின்னதிருப்பதியைச் சோ்ந்த இளம்பெண் ஜீனத் நிஷா. இவா் திங்க... மேலும் பார்க்க