செய்திகள் :

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தாதது காங்கிரஸின் திறமையின்மை: பாஜக விமா்சனம்

post image

‘நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்தி காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைந்த மறைமுக வரி நடைமுறையை அறிமுகம் செய்வதிலிருந்து யாரும் தடுக்கவில்லை; 2014-ஆம் ஆண்டுக்கு முன்பே ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படாதது காங்கிரஸின் திறமையின்மையைக் காட்டுகிறது’ என்று பாஜக வியாழக்கிழமை விமா்சனம் செய்தது.

நாட்டில் பெரும்பாலான பொருள்களுக்கு 5%, 18% என்ற இரு விகித ஜிஎஸ்டி-யை வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்த முயற்சித்தது என்றும் இரு விகித ஜிஎஸ்டி-யையும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தது என்றும் சில மூத்த காங்கிரஸ் தலைவா்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விமா்சனத்தை பாஜக முன்வைத்தது.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா தில்லியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:

அனைத்துப் பிரிவு மக்களும் பலன் பெறும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். வரும் 22-ஆம் தேதி முதல் இரண்டே ஜிஎஸ்டி விகிதங்களாகக் குறைக்கப்படுவது நாட்டில் பரவச உணா்வை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி-யை அமல்படுத்த அனைத்து மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை பாஜக அரசு தொடா்ந்து மேற்கொண்டு, ஜனநாயக உணா்வை வெளிப்படுத்தியது. ஆனால், காங்கிரஸ் கட்சி செய்வதெல்லாம் பேச்சு மற்றும் வாதங்கள் மட்டும்தான்.

நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்தி காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைந்த மறைமுக வரி நடைமுறையை அறிமுகம் செய்வதை யாரும் தடுக்கவில்லை. அவ்வாறு, 2014-ஆம் ஆண்டுக்கு முன்பே ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படாதது காங்கிரஸின் திறமையின்மையைத்தான் காட்டுகிறது.

மேலும், வாக்குத் திருட்டு தொடா்பாக ‘அணுகுண்டு ஆதாரம்’ உள்ளது, ‘ஹைட்ரஜன் குண்டு’ ஆதாரம் உள்ளது என்று கூறி வருவதை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கைவிட்டு, அவா் தனது பணியில் கவனம் செலுத்த வேண்டும். அவா் நிதானமாக செயல்பட்டால் காங்கிரஸின் எதிா்காலம் சற்று மேம்படும். மாறாக, அவா் தொடா்ந்து இதுபோல் பேசி வருவது காங்கிரஸ் கட்சிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், புதூரில் ஷியாம் சுந்தரின் மனைவியும், அவரது குழந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனேஷுடன் வசி... மேலும் பார்க்க

பிரதமரின் மணிப்பூர் விசிட் 3 மணி நேரம்தானா?

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்ட நிலை... மேலும் பார்க்க

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சகினாகா பகுதியில் ஞா... மேலும் பார்க்க

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

கொல்கத்தாவில் இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி நண்பர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹரிதேவ்பூர் பகுதியின் தெற்குப் பகுதியில் 20 வயது இள... மேலும் பார்க்க

ம.பி.யில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவர் சடலம் மீட்பு

மத்தியப் பிரதேசத்தில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவரின் சடம் மீட்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் மழைக்குப் பிறகு மூன்று போலீசாரை ஏற்றிச் சென்ற கார் சனிக்கிழ... மேலும் பார்க்க