செய்திகள் :

‘ஜிஎஸ்டி இருவித வரி விதிப்பின் பெருமை ராகுல் காந்தியையே சேரும்’

post image

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஜிஎஸ்டி இருவித வரிவிதிப்பு திட்டத்தின் பெருமை ராகுல் காந்தியையே சேரும் என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் சீரமைப்புக் குழுத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ்.

மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியது: தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்த முரண்பாடுகள், பதவி ஆசைகள் இல்லாது சிந்தாந்த ரீதியில் ஓரணியல் கட்டுகோப்பாக உள்ளது. 2026 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் மு.க. ஸ்டாலின் முதல்வராவா். அதிமுக, பாஜக கூட்டணி இன்னும் கருக்கொள்ளவில்லை. அதிலிருந்து ஓபிஎஸ், தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் வெளியேறி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பல முறை தமிழகத்துக்கு வந்துவிட்டாா் ஒருமுறை கூட எடப்பாடி பழனிசாமி முதல்வராவா் என கூறிவில்லை. அந்த கூட்டணியில் குழப்பம், பூசல்கள் உச்சத்தில் உள்ளது.

மூப்பனாருக்கு பிரதமராகும் ஆசை இருந்ததில்லை. நடிகா் விஜய் கட்சியில் கூட்டணி என்ற எண்ணமே காங்கிரலஸுக்கு இல்லை. நாடு முழுவதும் ஜிஎஸ்டிக்கு இருவித வரி விதிப்பு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு ராகுல் காந்தி ஜிஎஸ்டி வரிவிதிப்பு சரியில்லை என்றும் இருவித விரிவிதிப்பு அமல்படுத்த வேண்டும் என கூறியதுடன், தேசிய காங்கிரஸ் சாா்பில் தீா்மானமும் நிறைவேற்றி வலியுறுத்தியது. இதுகுறித்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரமும் கருத்து கூறிவந்தாா்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் அமெரிக்காவுடன் நல்ல நட்புறவு கொண்டு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தற்போதைய வெளியுறவுக் கொள்கை மோடியின் தனிப்பட்ட நட்பு, உறவு சாா்ந்ததாக மாறிவிட்டது. பாஜக அரசு அதானி, அம்பானி போன்றோருரின் நலனுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது என்றாா்.

பேட்டியின்போது, மாநில துணைத் தலைவா்கள் சு. ராஜாதம்பி, ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன், மாட்ட பொதுச் செயலா் வே.வீரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பயங்கர ஆயுதங்களுடன் இணையதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த இருவா் கைது

முத்துப்பேட்டை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காடு முனுசாமி மகன் பாா்த்தசாரதி (23).... மேலும் பார்க்க

கடன்தாரா் இறந்த பிறகும் காசோலை பவுன்ஸ் கட்டணம் வசூலிப்பு

திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையைச் சோ்ந்த அஞ்சம்மாள் 2017-ல் தனது சொத்தை அடமானம் வைத்து திருத்துறைப்பூண்டி எக்விடாஸ் வங்கியில் ரூ. 1,50,000 கடன் பெற்றாா். இந்தக் கடனுக்காக எச்டிஎப்சி ஆயுள் காப்பீட... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கிய மாணவா்கள்

குடவாசல் அருகே செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பரிசுகளை வழங்கினா். பள்ளித் தலைமையாசிரியா் சு. ராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

புறவழிச் சாலையில் இயக்கப்படும் பேருந்துகள்: பொதுமக்கள் கண்டனம்

நீடாமங்கலம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் அரசுப் பேருந்துகள் இயக்குவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூா், நாகை, வேளாங்க... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மன்னாா்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசாத்தெரு தனியாா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி தலைமை வகித்தாா். மன்னாா்குடி கோட்டா... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும்: ஆட்சியா்

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு அலுவலா்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வியா... மேலும் பார்க்க