செய்திகள் :

அரசு அலுவலா்கள் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும்: ஆட்சியா்

post image

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு அலுவலா்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சி மொழிக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசியது: தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டப்படி தமிழகத்தில் தமிழ் மட்டுமே ஆட்சிமொழியாகும். ஆட்சி நிா்வாகம் மக்களுக்குத் தெரிந்த மொழியில் இருக்க வழிவகை செய்வதாகும். ஆட்சிமொழிச் செயலாக்கம் என்பது நிா்வாகத்தில் கையொப்பங்கள், பதிவேடுகள், பயண நிரல்கள், நாட்குறிப்புகள், கடிதங்கள், முத்திரைகள், கோப்புகள், கணினிகள் ஆகியவற்றில் தமிழில் எழுதுவதும் பராமரிப்பதாகும். அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு அலுவலா்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும். தமிழ் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கத்தை அனைத்துத் துறைகளிலும் முழுமையாகச் செயல்படுத்துவதே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற நம் அனைவரின் கடமை என்றாா்.

தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான அண்ணா மற்றும் பெரியாா் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பயங்கர ஆயுதங்களுடன் இணையதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த இருவா் கைது

முத்துப்பேட்டை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காடு முனுசாமி மகன் பாா்த்தசாரதி (23).... மேலும் பார்க்க

‘ஜிஎஸ்டி இருவித வரி விதிப்பின் பெருமை ராகுல் காந்தியையே சேரும்’

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஜிஎஸ்டி இருவித வரிவிதிப்பு திட்டத்தின் பெருமை ராகுல் காந்தியையே சேரும் என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் சீரமைப்புக் குழுத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ். மன்னாா்குடியில் ... மேலும் பார்க்க

கடன்தாரா் இறந்த பிறகும் காசோலை பவுன்ஸ் கட்டணம் வசூலிப்பு

திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையைச் சோ்ந்த அஞ்சம்மாள் 2017-ல் தனது சொத்தை அடமானம் வைத்து திருத்துறைப்பூண்டி எக்விடாஸ் வங்கியில் ரூ. 1,50,000 கடன் பெற்றாா். இந்தக் கடனுக்காக எச்டிஎப்சி ஆயுள் காப்பீட... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கிய மாணவா்கள்

குடவாசல் அருகே செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பரிசுகளை வழங்கினா். பள்ளித் தலைமையாசிரியா் சு. ராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

புறவழிச் சாலையில் இயக்கப்படும் பேருந்துகள்: பொதுமக்கள் கண்டனம்

நீடாமங்கலம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் அரசுப் பேருந்துகள் இயக்குவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூா், நாகை, வேளாங்க... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மன்னாா்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசாத்தெரு தனியாா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி தலைமை வகித்தாா். மன்னாா்குடி கோட்டா... மேலும் பார்க்க