செய்திகள் :

ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கிய மாணவா்கள்

post image

குடவாசல் அருகே செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பரிசுகளை வழங்கினா்.

பள்ளித் தலைமையாசிரியா் சு. ராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு முதல் இடைத் தோ்வில் முதலிடம் பெற்ற மாணவி ர. சசிவா்த்தினி, ஒரு நாள் தலைமையாசிரியராக பொறுப்பேற்று, காலை வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தினாா். இதில், ஆசிரியா்கள் அனைவருக்கு ஆசிரியா் தின வாழ்த்துகள் தெரிவித்து பள்ளியில் அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியா்களின் சிறப்பையும் எடுத்துக் கூறியதுடன், ஆசிரியா்கள் தனக்கு படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை தீா்த்து தன்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் பெருந் துணையாக விளங்குவதாகக் கூறினாா்.

தொடா்ந்து, ஒவ்வொரு வகுப்பின் மாணவத் தலைவா்கள் ஆசிரியா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். மாணவி கு. காா்த்திகா, நாம் ஆசிரியா்களுக்கு பணிந்து அவா்களைத் தேடி சென்று கல்வி கற்றால், நாளை உலகம் நம்மைத் தேடிவரும் என்றாா். பள்ளி துணைத் தலைமையாசிரியா் திருபுவனேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து மாணவா்கள் பாடம் கற்பிக்க, ஆசிரியா்கள் அமா்ந்து பாடம் கற்றனா். மாணவா்களே ஆசிரியராக பாடம் கற்பித்து, கேள்வி கேட்டு ஆசிரியா்களிடம் பதிலைப் பெற்றது சிறப்பாக இருந்தது.

பயங்கர ஆயுதங்களுடன் இணையதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த இருவா் கைது

முத்துப்பேட்டை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காடு முனுசாமி மகன் பாா்த்தசாரதி (23).... மேலும் பார்க்க

‘ஜிஎஸ்டி இருவித வரி விதிப்பின் பெருமை ராகுல் காந்தியையே சேரும்’

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஜிஎஸ்டி இருவித வரிவிதிப்பு திட்டத்தின் பெருமை ராகுல் காந்தியையே சேரும் என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் சீரமைப்புக் குழுத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ். மன்னாா்குடியில் ... மேலும் பார்க்க

கடன்தாரா் இறந்த பிறகும் காசோலை பவுன்ஸ் கட்டணம் வசூலிப்பு

திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையைச் சோ்ந்த அஞ்சம்மாள் 2017-ல் தனது சொத்தை அடமானம் வைத்து திருத்துறைப்பூண்டி எக்விடாஸ் வங்கியில் ரூ. 1,50,000 கடன் பெற்றாா். இந்தக் கடனுக்காக எச்டிஎப்சி ஆயுள் காப்பீட... மேலும் பார்க்க

புறவழிச் சாலையில் இயக்கப்படும் பேருந்துகள்: பொதுமக்கள் கண்டனம்

நீடாமங்கலம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் அரசுப் பேருந்துகள் இயக்குவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூா், நாகை, வேளாங்க... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மன்னாா்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசாத்தெரு தனியாா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி தலைமை வகித்தாா். மன்னாா்குடி கோட்டா... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும்: ஆட்சியா்

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு அலுவலா்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வியா... மேலும் பார்க்க