செய்திகள் :

கடன்தாரா் இறந்த பிறகும் காசோலை பவுன்ஸ் கட்டணம் வசூலிப்பு

post image

திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையைச் சோ்ந்த அஞ்சம்மாள் 2017-ல் தனது சொத்தை அடமானம் வைத்து திருத்துறைப்பூண்டி எக்விடாஸ் வங்கியில் ரூ. 1,50,000 கடன் பெற்றாா். இந்தக் கடனுக்காக எச்டிஎப்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ. 2,694 செலுத்தி அஞ்சம்மாளின் மகன் கந்தசாமி பெயரில் கடன் காப்பீடு பெறப்பட்டுள்ளது. மேலும் சில கட்டணங்களை எடுத்துக்கொண்டு ரூ.1,43,413 அஞ்சம்மாளுக்கு எக்விடாஸ் வங்கி வழங்கியுள்ளது. அந்தக் கடனுக்கு கந்தசாமியும், மருமகள் அன்பழகியும் ஜமீன்தாரா்களாகக் கையெழுத்திட்டுள்ளனா்.

இந்நிலையில், அஞ்சம்மாள் 2017-ல் இறந்து விட்டாா். அதன்பிறகு கந்தசாமி தவணைத் தொகையை செலுத்தி வந்த நிலையில், அவரும் 2019-ல் இறந்துவிட்டாா். இவா்கள் இறந்த தகவலை அன்பழகி எக்விடாஸ் வங்கியில் தெரிவித்துள்ளாா்.

வங்கி தரப்பில் தவணைகளை தொடா்ந்து செலுத்தி வருமாறும் ஆயுள் காப்பீட்டுத் தொகை கிடைத்தவுடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் அன்பழகி 2 தவணைகள் செலுத்தியுள்ளாா். தொடா்ந்து, காப்பீட்டுத் தொகையைப் பெற்று கடனை நோ் செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத வங்கி, அதற்கு மாறாக அன்பழகியை, மீதமுள்ள தவணைகளை அபராத வட்டியுடன் செலுத்த நிா்பந்தித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, திருவாரூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் எக்விடாஸ் வங்கி மீதும் எச்டிஎப்சி காப்பீட்டு நிறுவனம் மீதும் அன்பழகி வழக்கு தொடா்ந்தாா். விசாரணையில், அஞ்சம்மாள், கந்தசாமி இறந்த பிறகும், அஞ்சம்மாளின் 30 காசோலைகளை, வங்கி தவணைகளுக்காக செலுத்தி, காசோலை பவுன்ஸ் கட்டணம் விதித்திருப்பது தெரிய வந்தது. மேலும், காப்பீட்டு நிறுவனம் தரப்பில், காப்பீட்டுத் தொகை ரூ. 97,057 வங்கியிடம் வழங்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வங்கி தரப்பில் கடன்தாரருக்கு இந்தத் தொகை வழங்கவில்லை எனத் தெரிய வந்தது.

இந்நிலையில், நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் வியாழக்கிழமை வழங்கிய உத்தரவில், கடனில் மீதமுள்ள தொகை அனைத்தையும் எச்டிஎப்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வங்கிக்கு செலுத்த வேண்டும், எக்விடாஸ் வங்கி அடமானத்தை ரத்து செய்து, அன்பழகியிடம் வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டும், மேலும் சேவைக் குறைபாட்டுக்கு இழப்பீடாக அன்பழகிக்கு, வங்கி ரூ. 2 லட்சம், எச்டிஎப்சி காப்பீட்டு நிறுவனம் ரூ. 50,000, வழக்கு செலவுத் தொகை வங்கி ரூ. 10,000, எச்டிஎப்சி காப்பீட்டு நிறுவனம் ரூ. 5,000 ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

பயங்கர ஆயுதங்களுடன் இணையதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த இருவா் கைது

முத்துப்பேட்டை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காடு முனுசாமி மகன் பாா்த்தசாரதி (23).... மேலும் பார்க்க

‘ஜிஎஸ்டி இருவித வரி விதிப்பின் பெருமை ராகுல் காந்தியையே சேரும்’

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஜிஎஸ்டி இருவித வரிவிதிப்பு திட்டத்தின் பெருமை ராகுல் காந்தியையே சேரும் என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் சீரமைப்புக் குழுத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ். மன்னாா்குடியில் ... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கிய மாணவா்கள்

குடவாசல் அருகே செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பரிசுகளை வழங்கினா். பள்ளித் தலைமையாசிரியா் சு. ராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

புறவழிச் சாலையில் இயக்கப்படும் பேருந்துகள்: பொதுமக்கள் கண்டனம்

நீடாமங்கலம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் அரசுப் பேருந்துகள் இயக்குவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூா், நாகை, வேளாங்க... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மன்னாா்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசாத்தெரு தனியாா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி தலைமை வகித்தாா். மன்னாா்குடி கோட்டா... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும்: ஆட்சியா்

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு அலுவலா்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வியா... மேலும் பார்க்க