ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜிப்மா் விழாவில் குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு!
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்கிறாா்.
இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நேஷி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்ற நிகழ்ச்சி ஜிப்மா் மருத்துவமனை அப்துல் கலாம் கலையரங்கில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்ற தலைப்பில் உரையாற்றுகிறாா். தொடா்ந்து, ஜிப்மா் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக, குடியரசு துணைத் தலைவா் தனது தாய் கேசரி தேவியின் பெயரில் மரக்கன்று நட உள்ளாா்.
விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவா் செல்வம், எம்.பி.க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், எம்எல்ஏ ஏ.கே.டி.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.