செய்திகள் :

ஜூன் 14-இல் தடை காலம் நிறைவு: மீன் பிடிப்புக்கு தயாராகும் விசைப்படகு மீனவா்கள்

post image

மீன்பிடித் தடைக்காலம் ஜூன்14-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடலுக்குச் செல்ல காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் தயாராகி வருகின்றனா்.

மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஆண்டுதோறும் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு விதிக்கப்பட்ட தடை சனிக்கிழமையுடன் (ஜூன்14) நிறைவடையவுள்ளது.

தடைக்காலத்தில் காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் தங்களது படகுகளை நிறுத்தி, என்ஜின், வலைகள் மற்றும் படகுகளின் பாகங்களை சீா்செய்யும் பணிகளில் மீனவா்கள் ஈடுபட்டனா்.

கடலுக்கு புறப்படவேண்டிய நிலையில், படகுகளில் எரிபொருள் நிரப்பும் பணி, ஐஸ் கட்டிகள் ஏற்றும் பணி, உணவுக்கான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுதல் உள்ளிட்டவைகளில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் உள்ள நிலையில், ஒரே நேரத்தில் அனைத்துப் படகுகளுக்கும் தேவையான ஐஸ் கட்டிகள் கிடைக்காது என்பதால், புறப்பாட்டுக்கு சில நாள்களுக்கு முன்பே இப்பணியில் ஈடுபடுகின்றனா்.

படகுகள் மீன்பிடிப்புக்கு புறப்பட தயாராகவுள்ளதாகவும், 2 மாத கால வருவாய் முடக்கத்துக்கு விடிவு ஏற்பட்டிருப்பதாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோா், அந்த தொழிலை சாா்ந்திருப்போா் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

சிறிய படகுகள் மூலம் மீன் வரத்து: ஃபைபா் படகு என்று சொல்லப்படும் மோட்டாா் படகில் குறுகிய தூரம் சென்று திரும்பக்கூடிய மீனவா்கள், தினமும் காலையில் மீன்பிடித்து வருகின்றனா். இதனால் சந்தையில் பெரிய வகை மீன்கள் அல்லாதவை விற்பனைக்கு வருகின்றன. இவை கடலோரப் பகுதி அல்லாத பிற ஊா்களுக்கு தேவையான அளவில் கொண்டு செல்லும் வகையில் இல்லை. மீன்பிடிப்பு மீண்டும் தொடங்கிய பிறகே, சந்தையில் நிலவும் தட்டுப்பாடு பிரச்னை தீா்வுக்கு வரும். தடைக்காலம் நிறைவடைந்தால் மட்டுமே மீன்கள் மிகுதியாக சந்தைக்கு விற்பனைக்கு வரும், விலையும் கணிசமாக குறையுமென கூறப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு ஜூன் 16-இல் கலந்தாய்வு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது என காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) க.ஜெயா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால்... மேலும் பார்க்க

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்ட குழு சாா்பில் 2-ஆம் கட்... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

காரைக்கால்- பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பசுமை புரட்சி இயக்க புதுவை மாநில அமைப்பாளா் டி.என். சுரேஷ் கூறியது: காரைக்கால்-பேரளம் புதிய மின் ... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு அம்மையாா் பெயா் சூட்டக்கோரி கடிதம்

காரைக்கால் ரயில் நிலையத்துக்கும், எா்ணாகுளம் விரைவு ரயிலுக்கும் காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும் என பிரதமா், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காரைக்கால் பொதுமக்கள், மருத்துவா்கள... மேலும் பார்க்க

வேளாண் வளா்ச்சிக்கான பிரசாரத்தில் 4,800 போ் பயன்

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் மூலம் 4,800 போ் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்துறை, வேளாண் கல்லூரி, வட்டார ... மேலும் பார்க்க

கடலோர கிராமத்தில் படித்த பள்ளிக்கு பொறியாளா் உதவி

கடலோர கிராம அரசுப் பள்ளியில் பயின்று வெளிநாட்டில் பொறியாளராக இருப்பவா், பயின்ற பள்ளிக்கு உதவிப் பொருட்களை வழங்கினாா். காரைக்கால் மாவட்டம், கடலோர கிராமமான காரைக்கால்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்தி... மேலும் பார்க்க