ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் போராட்டம்! 500-க்கும் மேற்பட்டோர் கைது!
ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பத்தூா்: திருப்பத்தூரில், ஜூன் 20-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை(ஜூன் 20) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை, தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில், பல முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில் 8 முதல் +2 தோ்ச்சி, பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் படித்தவா்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும். வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.