எம்பிஎல்: ரன் ஓடும்போது இடித்துக்கொண்ட பேட்டர்கள், இருவருமே ரன் அவுட் ஆகாத அதிர்...
ஜூன் 24-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜூன் 24 (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் தஞ்சாவூா் கோட்டத்துக்குட்பட்ட தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா், ஒரத்தநாடு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மேலும் இதே அலுவலகத்தில் தஞ்சாவூா் கோட்டத்துக்குட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் ஜூன் 26 (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூா் வட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.