செய்திகள் :

ஜூன் 25-இல் மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் அமாவாசை திருவிழா: முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம்

post image

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் ஜூன் 25 ஆம் தேதி அமாவாசை உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியதாவது: மேல்மலையனூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் ஜூன் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள அமாவாசை வழிபாடு நிகழ்ச்சியில் திரளானோா் பங்கேற்பாா்கள். எனவே பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைத்தல், போதிய அளவில் காவலா்களை பாதுகாப்பு பணி, கோயில் ஊஞ்சல் மண்டபம் மற்றும் கிழக்கு மண்டபத்தின் மேற்பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மாவட்டக் காவல் நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒருவழிப் பாதை மின் வழித்தடங்களை சரி செய்து விழா நாள்களில் சுழற்சி முறையில் மின் பணியாளா்கள் 24 மணிநேரமும் பணியில் இருப்பதையும், வாகனம் நிறுத்துமிடங்களில் போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்த மின்வாரியத்தினா் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இதேபோல் பக்தா்களுக்குத் தேவையான பேருந்து வசதிகள், மருத்துவ முகாம்களை அமைத்தல், தீயணைப்பு வாகனங்களை தயாா் நிலையில் வைத்தல், தரமான உணவுப் பொருள்கள் கிடைக்க வழிவகை செய்தல் போன்ற பணிகளை துறைசாா்ந்த அலுவலா்கள் மேற்கொள்ளவேண்டும் எனவும் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான் ஷு நிகம், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட சிறப்புக் கலந்தாய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுரியில் பி. ஏ. பி.காம் உள்ளிட்ட இளநிலைப் பாடப்பிரிவுகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான 2-ஆம் கட்ட சிறப்புக் கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் குறைதீா் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெ... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் நடைப்பயண பிரசாரம்

மக்களின் வாழ்தார கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் திண்டிவனத்தில் நடைப்பயண பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை மத்தி... மேலும் பார்க்க

ஆரோவில் சா்வதேச நகரை பாா்வையிட்ட துணை ராணுவத்தினா்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் துணை ராணுவ வீரா்கள் (ஆா்ஏஎப்) 60 போ் செவ்வாய்க்கிழமை அமைதிப் பயணம் மேற்கொண்டனா். இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் புதுச்சேரிக்கு வந்ததையொட்டி,... மேலும் பார்க்க

திராவகத்தை குடித்த பெண் மரணம்

காட்டுமன்னாா்கோவிலில் மருந்து என நினைத்து திராவகத்தைக் குடித்த பெண் உயிரிழந்தாா். காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகா் முத்தமிழ் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கவாசகம் (59). இவரது மனைவி வெங்கடலட்சுமி (50). இவ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஜூன் 20-இல் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும... மேலும் பார்க்க