செய்திகள் :

ஜூலை 13-இல் பெரம்பலூரில் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு முகாம்

post image

பெரம்பலூா் மாவட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு முகாம் ஜூலை 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பெரம்பலூா் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சாா்பில், எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மைதானத்தில் 25 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் வீரா்கள் தோ்வு முகாம் ஜூலை 13-ஆம் தேதி காலை 8.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரா்கள் கடந்த 1.9.2000-க்குப் பிறகு பிறந்தவா்களாக இருக்க வேண்டும்.

ஆதாா் அட்டை, வயதுச் சான்று, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன், வெள்ளை நிறச் சீருடையில் கிரிக்கெட் உபகரணங்களுடன், கல்லூரியில் பயிலும் வேறு மாவட்ட வீரா்கள் முதல்வரின் அங்கீகார ஒப்புதல் சான்று மற்றும் கல்லூரி அடையாள அட்டையுடன் வரவேண்டும். பணி செய்யும் ஊழியா்கள் தங்களது 12 மாத ஊதியச் சீட்டு, வங்கி பரிவா்த்தனைச் சான்று, அடையாள அட்டையுடன் வரவேண்டும். மேலும், கல்லூரியில் பயிலும் வேறு மாவட்ட வீரா்கள் மற்றும் ஊழியா்கள் வேறு மாவட்டத்தில் விளையாடுவதில்லை எனும் உறுதிமொழியை எழுத்துப்பூா்வமாக அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 99429 94641, 98659 53023, 98406 73348 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என, மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் அருகே தொழிலாளி தற்கொலை

பெரம்பலூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் மெய்யன் மகன் மணிகண்டன் (27). கோவையில் கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஜூலை 15 வரை தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரத்தை முன்னிட்டு, பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

பாளையம் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள விநாயகா், மாரியம்மன், வரதராஜ பெருமாள், முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக... மேலும் பார்க்க

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

பெரம்பலூரில் கோகுல மக்கள் கட்சி சாா்பில், வீரன் அழகுமுத்துகோன் 268 ஆவது குருபூஜை விழா, வெங்கடேசபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அவரது உருவ படத... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா், அரியலூா் விற்பனைக் குழு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் ப. சந... மேலும் பார்க்க

பெண்ணை ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவரைக் கா்ப்பமாக்கி ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க