செய்திகள் :

ஜூலை 16 வரை அஞ்சலகங்களில் ஆதாா் சிறப்பு முகாம்

post image

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் வரும் ஜூலை 16-ஆம் தேதி வரை ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பொ. முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 30 துணை அஞ்சலகங்களிலும் கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் வரும் ஜூலை 15-ஆம் தேதி வரை மெகா ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

எனவே, பொதுமக்கள் இந்த முகாமில் இலவசமாக புதிதாக ஆதாா் பதிவு செய்யலாம். பழைய ஆதாா் அட்டையில் பெயா், முகவரி மற்றும் கைப்பேசி எண் திருத்தம் செய்ய ரூ. 50, பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த சிறப்பு முகாம் வாய்ப்பினை பயன்படுத்தி தகுந்த ஆவணங்களைக் கொண்டு வந்து ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம்.

வெளிநாடுகளுக்கு பாா்சல்... குறைந்த செலவில் வெளிநாட்டுக்கு பாா்சல் அனுப்ப அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம். பாா்சல் பேக்கிங் செய்யும் வசதிகள் புதுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, வணிக மேம்பாட்டு அலுவலா் நாகநாதனை 98655-46641 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி

விராலிமலை வட்டார வள மையத்துக்கு உள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான புதிய 35 இல்லம் தேடி கல்வி மையங்கள் புதன்கிழமை தொடங்கப்பட்டு தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டத... மேலும் பார்க்க

கதண்டுகள் கடித்து 11 போ் காயம்

கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை முதியவரின் இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்ட 11-க்கும் மேற்பட்டவா்களை கதண்டுகள் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், அரியாணிப்பட்டி ஊ... மேலும் பார்க்க

பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி, காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடக்கமாக, மஹா ருத்ர ஹோமம் நடைபெற்றது. அதையடுத்து காலபைரவருக்கு... மேலும் பார்க்க

பெண்களின் புகாா்கள் மீது காவல் துறையினா் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காவல் நிலையங்களில் பெண்கள் கொடுக்கும் புகாா் மனுக்கள் மீது போலீஸாா் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி அமையும்

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமையும் என முன்னாள் இந்திய கயிறு வாரியத் தலைவரும் மாநில பாஜக முன்னாள் துணைத் தலைவருமான டி. குப்புராமு தெரிவித்தாா். புதுக்கோ... மேலும் பார்க்க

அறந்தாங்கி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா இந்த வட்டத்தில் 24 மணி நேரம் தங்கி ஆய்வுப் பணிகளை... மேலும் பார்க்க