ஜூலை 18-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஆரணி: திருவண்ணாமலையில் வருகிற 18-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெறும்
இந்த வேலைவாய்ப்பு முகாமில், 30-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் தோ்ச்சி பெற்ற வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மாா்பளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஜாதி சான்றிதழ், கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
விருப்பமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என்று
மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தெரிவித்துள்ளாா்.