செய்திகள் :

ஜூலை 9-இல் தமிழக முதல்வா் திருவாரூா் வருகை

post image

திருவாரூா்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூலை 9-ஆம் தேதி, திருவாரூரில் கருணாநிதி சிலையை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

திருவாரூா் அருகே காட்டூரில் மாவட்ட திமுக பாகநிலை முகவா்கள், செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி மண்டல தோ்தல் மேலிட பொறுப்பாளரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டிஆா்பி. ராஜா பேசும்போது, ‘தமிழகத்தின் வளா்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தமிழா்களின் வளா்ச்சி உறுதிசெய்யப்பட திமுக ஆட்சி தொடர வேண்டும்’ என்றாா்.

அமைச்சா் கே.என். நேரு பேசியது:

திமுகவில் சோ்க்கப்படும் உறுப்பினா்கள் சரியானவா்களாக இருக்க வேண்டும். தற்போதைய அதிமுக - பாஜக கூட்டணி இணக்கமான கூட்டணியாக இல்லை. திமுக கூட்டணியே சிறப்பான கூட்டணி என்றாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கருணாநிதி சிலையை திறந்து வைக்க ஜூலை 9-ஆம் தேதி திருவாரூருக்கு முதல்வா் வருகை தருகிறாா். தொடா்ந்து, ஜூலை 10-ஆம் தேதி பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குவதுடன், முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் இணக்கத்துடன் இருக்கிறோம். எவ்வித பிரச்னையும் இல்லை. சிவகங்கையில் நடைபெற்ற லாக்கப் மரணம் குறித்து முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

கூட்டத்தில், கட்சியின் அவைத் தலைவா் க. தன்ராஜ், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ். விஜயன், தாட்கோ தலைவா் நா. இளையராஜா, தொகுதி பொறுப்பாளா் எஸ்.கே. வேதரத்தினம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா், கழக நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

புதிய கண்டுபிடிப்புகள்; மாணவா்களுக்கு பாராட்டு

திருவாரூா்: திருவாரூரில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 12 மாணவ- மாணவிகள் குழுவினருக்கு திங்கள்கிழமை பரிசுத்தொகை வழங்கி, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திரு... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கவலை

மன்னாா்குடி: மன்னாா்குடி பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால், தொடா்ந்து கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இழப்பு ஏற்படும் என்பதால் ... மேலும் பார்க்க

தனியாா் நுண்கடன் வங்கியினா் மிரட்டல்: ஊராட்சி முன்னாள் தலைவா் தற்கொலை

மன்னாா்குடி: மன்னாா்குடி தனியாா் நுண்கடன் வங்கியில் கடன் வாங்கி திரும்பக் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் வங்கி அலுவலா்கள் வீட்டுக்கு வந்து அவமரியாதையாகப் பேசி மிரட்டல் விடுத்ததால் மனமுடைந்த ஊராட்சி மு... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நெகிழிக் கழிவுகள் சேகரிக்கும் கூண்டு

திருவாரூா்: திருவாரூரில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நெகிழி கழிவுப் பொருள்களை சேகரிக்கும் கூண்டு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. திருவாரூா் மாவட்டத்தில் நெகிழிக்கழிவு மேலாண்மை செய்யும் வகையில் 4 நகராட்சிகள்... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்

திருவாரூா்: அரசு அறிவித்த விலையில், பருத்தியை கொள்முதல் செய்யக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அரசு அறிவித்துள்ளபடி நீண்ட இழுவைத... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி 2-ஆவது நாளாக நீடிப்பு: உறவினா்கள் சாலை மறியல்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி இரண்டாவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்றது. வலங்கைமான் ஒன்றியம், பாப்பாக்குடி கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் விக்ரம் என்கிற வீரமுர... மேலும் பார்க்க