செய்திகள் :

ஜெய்சங்கர்: "ஒசாமா ஏன் பாகிஸ்தானை பாதுகாப்பானதாக கருதினார்?" - மேற்கு நாடுகளுக்கு நச் கேள்வி!

post image

பிரஸ்ஸல்ஸில் இருந்து ஐரோப்பிய தலைவர்களைச் சந்தித்துவரும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகள் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த பிரச்னையை, அண்டை நாடுகள் இடையேயான எல்லைப் பிரச்னையாக அல்லாமல், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையாகப் பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

'இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை அல்ல'

மேற்குலக மீடியாக்கள் பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இரு அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளுக்கு இடையிலான போட்டியாக காட்சிப்படுத்தியதாக விமர்சித்துள்ளார் ஜெய்சங்கர்.

Jaishankar
Jaishankar

"நான் உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒசாமா பின்லேடன் என்று ஒரு நபர் இருந்தார். அவரும் அவர் சார்ந்தவர்களும் வெஸ்ட் பாயிண்டிற்கு அடுத்துள்ள ஒரு பாகிஸ்தான் இராணுவ நகரத்தில் பல ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கலாம் என நினைத்தது ஏன்?... இந்த உலகம் புரிந்துகொள்ள வேண்டும் - இது வெறும் இந்தியா பாகிஸ்தான் பிரச்னை அல்ல. தீவிரவாதத்தைப் பற்றியது. இந்த தீவிரவாதம் மீண்டும் உங்களையும் துரத்தி வரக்கூடும்" எனப் பேசியுள்ளார் ஜெய்சங்கர்.

ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து...

ஜெய்சங்கரிடம், ரஷ்யா, உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துவரும் சூழலில், மேற்கு நடுகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

Jaishankar
Jaishankar

அதற்கு அவர், "இந்தியா போர்களத்தில் இருந்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பவில்லை... அந்த தீர்வை பரிந்துரைப்பவர்களாகவோ அல்லது தீர்ப்பளிப்பவர்களாகவோ நாங்கள் இல்லை... ஆனால் நாங்கள் அதில் சம்பந்தப்படாதவர்களாகவும் இல்லை. ரஷ்யா, உக்ரைன் இரண்டு நாடுகளுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்." எனப் பேசியுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் இந்தியா மீது ஆக்கிரமிப்பு செய்தபோது மேற்கு நாடுகள் பாகிஸ்தான் பக்கம் நின்றதையும் சுட்டிக்காட்டினார்.

"ஒவ்வொரு நாடும், இயற்கையாகவே, அதன் சொந்த அனுபவம், வரலாறு மற்றும் நலன்களைக் கருத்தில் கொள்கிறது. இந்தியாவுக்கு ஒரு நீண்டகால குறை இருக்கிறது. நாங்கள் சுதந்திரம் பெற்றபோது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு படைகளை காஷ்மீருக்கு அனுப்பியது. அப்போது அவர்களுக்கு ஆதரவளித்தது யார்? மேற்குலக நாடுகள்." என சுட்டிக்காட்டினார் ஜெய்சங்கர்.

"அப்போது மழுப்பலாகவோ மௌனமாகவோ இருந்துவிட்டு, இப்போது 'சர்வதேச கொள்கைகள் பற்றி ஒரு சிறந்த உரையாடலை நடத்துவோம்' எனக் கூறினால், அவர்களின் சொந்த வரலாற்றைத் திரும்பிப் பார்க்கச் சொல்வதில் நியாயம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.

Custody Death: 30 sec வீடியோ; சரண்டர் ஆன அரசு தரப்பு; நீதிமன்றத்தில் என்ன நடந்தது? - ஹென்றி திபேன்

சிவகங்கையில் காவல்துறையினரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமார் சம்பந்தப்பட்ட வழக்கு, நேற்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்திருந்தது. நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி அஜித் க... மேலும் பார்க்க

போலி ISI குடிநீர்: ``திமுக பிரமுகர் நிறுவனத்தை மூடி சீல் வைக்க வேண்டும்.." - அதிமுகவினர் மனு

தி.மு.க ராஜ்யசபா எம்.பி கல்யாணசுந்தரம், இவரது மகன் முத்துசெல்வம் தி.மு.க ஒன்றிய செயலாளர். இவர் சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள பம்பபடையூரில் ஹோலி டிராப் பேக்கேஜ்டு என்கிற குடிநீர் நிறுவனத்தை நடத்து... மேலும் பார்க்க

அகற்றப்படாத மரங்கள்; அப்படியே ரூ.100 கோடி மதிப்பில் செய்யப்பட்ட சாலை விரிவாக்க பணி - எங்கே தெரியுமா?

தார் ரோட்டில் வாகனம் ஓட்டிகொண்டிருக்கிறீர்கள். அந்த ரோடு புதிதாக போட்டது தான். அதனால், எங்கேயும் மேடு, பள்ளம் இல்லை. ஆனால், ஒரே ஒரு பிரச்னை தான். அது அந்த ஸ்மூத்தான தார் ரோட்டில் அங்காங்கே மரங்கள் இரு... மேலும் பார்க்க

'அஜித் மரணத்தின் முதல் குற்றவாளி ஸ்டாலின்தான்...' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட... மேலும் பார்க்க

Maoist: 60 ஆண்டு யுத்தம் இறுதி கட்டத்தை எட்டுகிறதா? மத்திய அரசின் மாவோயிஸ்ட் வேட்டை - பின்னணி என்ன?

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இந்திய அரசின் சண்டை இன்று, நேற்று தொடங்கியது அல்ல. 1967ம் ஆண்டு நக்சல்பாரி இயக்கம் தோன்றியது முதலே இந்த ரத்த சரித்திரம் எழுதப்பட்டு வருகிறது. கடந்த தசாப்தங்களில் இல்லாத அளவு இ... மேலும் பார்க்க

``இந்தியாவுக்கு வரும் அமெரிக்க நிறுவனங்கள்?'' - ட்ரம்ப் சொல்லும் வர்த்தக ஒப்பந்தம் லாபமா?

இந்தியா - அமெரிக்கா இடையே பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று ட்ரம்ப் கூறி வருகிறார். இந்திய அரசின் பக்கத்தில் இருந்து இது வெறும் தகவலாகத் தான் வருகிறதே தவிர, உறுதியாக ... மேலும் பார்க்க