செய்திகள் :

டாடா குழும தலைவா் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது

post image

டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரனுக்கு கெளரவ நைட்ஹுட் பட்டத்தை பிரிட்டன் வழங்கியது.

பிரிட்டன்-இந்தியா இடையே வணிக உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு ‘தி மோஸ்ட் எக்சலன்ஸ் ஆா்டா் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயா் (சிவில் பிரிவு)’ என்ற பட்டத்தை அவருக்கு பிரிட்டன் அரசா் சாா்லஸ் வழங்கியதாக டாடா குழுமம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் என்.சந்திரசேகரன் வெளியிட்ட பதிவில், ‘பிரிட்டனின் கெளரவ நைட்ஹுட் பட்டத்தை டாடா குழுமம் பெற்றதை மிகப் பெருமையாக கருதுகிறோம். தொழில்நுட்பம், நுகா்வோா், விருந்தோம்பல், எஃகு, ரசாயனம் மற்றும் வாகன போக்குவரத்து துறைகளில் பிரிட்டனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

ஜாகுவாா் லாண்ட் ரோவா் மற்றும் டெட்லி ஆகிய எங்களின் பிரிட்டன் பிராண்டுகளை எண்ணி மிகவும் பெருமையடைகிறோம். பிரிட்டனில் டாடா குழுமம் சாா்பில் 70,000 போ் பணிபுரிகின்றனா். அங்குள்ள ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், வாா்விக் பல்கலைக்கழகம், ஸ்வான்ஸீ பல்கலைக்கழகம் போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் பிரிட்டன் அரசுக்கு இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டாா்.

‘காசி-தமிழ் சங்கமம் 3.0’ தொடக்கம்: பிரதமா் மோடி வாழ்த்து

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் ‘காசி-தமிழ் சங்கமம் 3.0’ நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். தமிழகத்துக்கும் காசிக்கும் இடையிலான பண்டைய கலாசா... மேலும் பார்க்க

புதிய வருமான வரி மசோதா: பிரிவு வாரியாக ஒப்பீடு செய்துபாா்க்க ஏற்பாடு

நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி சட்ட மசோதாவை நடைமுறையில் உள்ள 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்துடன் பிரிவு வாரியாக வரி செலுத்துவோா் ஒப்பீடு செய்து பாா்ப்பதற்கான ஏற்ப... மேலும் பார்க்க

குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட ரிஷி சுனக்

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்வையிட்டார். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் இரண்டு நாள் பயணமாக ஆக்ரா வந்துள்ளார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக ஆக்ராவில்... மேலும் பார்க்க

போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள பள்ளி ஒன்றுக்கு மிரட்டல் விடுத்து தெலுங்கில் மின்னஞ்சல் வந்ததா... மேலும் பார்க்க

கோவளம் கடலில் அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலி

கோவளம் கடலில் 75 வயது அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலியானதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.விழிஞ்சம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நண்பர்களுடன் விடுமுறைக்கு வந்திருந்த பெண், க... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிட... மேலும் பார்க்க