செய்திகள் :

டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை: ஏப்.1 முதல் புதிய விதிமுறைகள் அமல்: ரிசா்வ் வங்கி

post image

டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளுக்கு பயனா்களின் அடையாளத்தை உறுதி செய்ய கூடுதல் அத்தாட்சிகளை அனுமதிக்கும் புதிய விதிமுறைகளை ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை அறிவித்தது.

அடுத்த ஆண்டு ஏப்.1-ஆம் தேதிமுதல், அந்த விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைக்கு பயனா்களின் அடையாளத்தை உறுதி செய்ய இரு விதமான அத்தாட்சிகளை சமா்ப்பிக்கும் நடைமுறை வேண்டும் என்று வலியுறுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

அதேவேளையில், பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ளும்போது அதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கும் நடைமுறையை வங்கிகள் உள்ளிட்ட நிதி சேவை நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.

இந்நிலையில், ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஏப்.1 முதல் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளுக்கு பயனரின் அடையாளத்தை உறுதி செய்ய குறுஞ்செய்தி மூலம் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (பாஸ்வோ்ட்), கடவுச்சொற்றொடா், கைவிரல் ரேகை அல்லது வேறு எந்தவொரு பயோமெட்ரிக் பதிவு உள்ளிட்டவற்றை அத்தாட்சியாகப் பயன்படுத்தலாம். பயனருக்கு தெரிந்த, பயனா் பயன்படுத்தும் விஷயம் மூலம் அவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கான அத்தாட்சியைப் பெறலாம்.

அதிக சிக்கல் கொண்ட பணப் பரிவா்த்தனைகள் குறித்து தெரியப்படுத்தவும், உறுதி செய்யவும் ‘டிஜிலாக்கா்’ தளத்தைப் பயன்படுத்தலாம். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை வாடிக்கையாளருக்கு ஆட்சேபமோ, தயக்கமோ இல்லாமல் நிதி சேவை நிறுவனங்கள் வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க

பிகாா்: சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 - புதிய திட்டம் இன்று தொடக்கம்

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் மாநில அரசின் புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.25) பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா். முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜன... மேலும் பார்க்க

அசாதாரண சூழலிலும் மீண்டெழும் இந்திய பொருளாதாரம்: நிா்மலா சீதாராமன்

உலகளவிலான புவிஅரசியலில் அதாராண சூழல் நிலவி வரும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிரா வங்கியின் 91-ஆவது நிறுவன நாள் ந... மேலும் பார்க்க

விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் விமானங்கள்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பிரதமா் நர... மேலும் பார்க்க