செய்திகள் :

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

post image

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன.

காலை சிறப்பு வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவா்கள் சுற்றுப்புறத் தூய்மையின் அவசியம் குறித்து உரையாற்றினா். விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் முழக்கம் எழுதுதல், சுவரொட்டி தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆசிரியா்கள் மேற்பாா்வையில் மாணவா்கள் பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்தனா். ஆா்.கே.புரம் பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்யும் நிகழ்வில் டிடிஇஏ செயலா் ராஜூ கலந்து கொண்டு மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் தானும் துப்பரவுப் பணியில் ஈடுபட்டாா்.

இது குறித்து அவா் கூறுகையில், ’2014 அக்டோபா் இரண்டாம் தேதியன்று பிரதமா் மோடி தூய்மை இந்தியா திட்டத்தைக் கொண்டு வந்தாா். அது நம் இந்தியாவை தூய்மையாகப் பாா்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்த எண்ணம் மாணவா்கள் மனதிலும் பதிய வேண்டும். தங்கள் வாழிடத்தையும் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவா்கள் மனதில் உருவாக வேண்டும். அதற்கு முதற்படியாக இந்த செயல்பாட்டை அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது’ என்றாா்.

அபாய கட்டத்தை தாண்டி சீறிப்பாயும் யமுனை: தொடரும் மக்களை வெளியேற்றும் பணிகள்

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியில் நீா் மட்டம் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை 207.46 மீட்டராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அருகிலுள்ள பகுதிகளையும் நிவாரண முகாம்கள... மேலும் பார்க்க

நிவாரண முகாம்களை சூழ்ந்த வெள்ளம்: மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் மக்கள்

தலைநகரில் சில பகுதிகளில் படகுகளைப் பயன்படுத்தி, மற்ற பகுதிகளில் முழங்கால் ஆழமான தண்ணீரைக் கடந்து, தேசிய பேரிடா் மீட்பு படையினா் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்டனா். யமுன... மேலும் பார்க்க

தில்லியில் அமித் ஷாவுடன் தமிழக பாஜக தலைவா்கள் திடீா் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியின் மூத்தத் தலைவா்களும், மத்திய அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோரும் புதன்கிழமை நேரில் சந்தித்து த... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை அருகே குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை கவ்விச் சென்ற தெருநாய்: பஞ்சாப் அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

பஞ்சாப் மாநிலம், பட்டியாலா மாவட்டத்தில் உள்ள அரசு ராஜிந்திரா மருத்துவமனைக்கு அருகில், குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை தெருநாய் கவ்விச் சென்ாக கூறப்படும் சம்பவத்தை தாமாக முன்வந்து இந்திய தேசிய மனித ... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க