செய்திகள் :

டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவிகித வரியை விதித்தார்.

இந்த வரிவிதிப்பானது, இன்றுமுதல் (ஆகஸ்ட் 27) அமலுக்கு வருகிறது. வரிவிதிப்பின் காரணமாக நேற்றைய பங்குச்சந்தை சரிந்தே காணப்பட்டது.

இந்த நிலையில், டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரித்து வருவதாக ஜெர்மன் செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த சில நாள்களில் பிரதமர் மோடியை 4 முறை டிரம்ப் தொடர்புகொள்ள முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் மோடி நிராகரித்ததாக ஜெர்மன் செய்தி கூறுகிறது.

மேலும், இந்தியா மீதான வரிவிதிப்பால் கோபமுற்றதை பிரதமர் மோடி வெளிக்காட்டுவதாகக் குறிப்பிடுகிறது.

இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் போரில் 1,314 கோடி மதிப்பிலான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை அதிகாலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்தும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பேசினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், போரின்போது பிரதமர் மோடியிடம் பேசினேன். `உங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன பிரச்னை?’ என்று கேட்டேன். தொடர்ந்து, பாகிஸ்தானிடம் `உங்களுக்கும் இந்தியாவுக்கும் என்ன பிரச்னை?’ என்று கேட்டேன்.

இரு நாடுகளுக்கிடையேயான வெறுப்பானது, நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. நூற்றாண்டுகளாக வெவ்வேறு பெயர்களில் அது இருந்து வருகிறது.

உங்களுடன் (மோடி) வர்த்தகம் செய்ய விரும்பவில்லை என்று கூறினேன். அல்லது தலைசுற்றும் அளவுக்கு உங்கள் மீது அதிக வரி விதிக்கப் போகிறோம் என்று கூறினேன். நீங்கள் இருவரும் ஓர் அணு ஆயுதப் போருக்குக் காரணமாக இருக்கப் போறீர்கள் என்று கூறி, நாளை என்னை மீண்டும் அழைக்கவும் என்று கூறினேன். இருப்பினும், அடுத்த 5 மணிநேரத்திலேயே போர் முடிவுக்கு வந்தது.

வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேச்சு

அவர்களிடையே மீண்டும் போர் மூளலாம். அப்படி நடந்தால், அதையும் நான் தடுத்து நிறுத்துவேன். போரை நாம் அனுமதிக்கக் கூடாது. அது நல்லதல்ல.

போரில் நிறைய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 150 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்களாக இருக்கலாம். இருப்பினும், உண்மையான எண்ணிக்கையை அவர்கள் வெளியிடவில்லை.

ரஷியாவும் உக்ரைனும் உலகப் போருக்கு வழிவகுப்பது போல, இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்கப் போகின்றன என்று தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இரு நாடுகளிடையேயான போரை நிறுத்துமாறு அமெரிக்கா உள்பட வேறுசில நாடுகளும் வலியுறுத்தின.

இதனிடையே, போரை நிறுத்துமாறு பாகிஸ்தானும் வேண்டுகோள் விடுத்ததால், தாக்குதலை இந்தியா கைவிட்டது.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தப்பட்டதற்குக் காரணம் நான்தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

டிரம்ப்பின் பேச்சுக்கு மத்திய அரசும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இதையும் படிக்க:இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்

PM Modi refused Trump's calls 4 times in recent weeks: German newspaper

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று(ஆக... மேலும் பார்க்க

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் திடீரென பெய்த கனமழையால் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பரிதாபமாக உயிழந்தனர்.ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் திடீரென பெய்த க... மேலும் பார்க்க

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இன்றைய நாளில் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்... மேலும் பார்க்க

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ம... மேலும் பார்க்க