செய்திகள் :

டிராக்டா் மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

post image

திருவாரூா் அருகே டிராக்டா்- இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் அருகே கீழகாவாதுகுடியைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் முகுந்த் தியாகேஷ் (8). சந்தோஷ்நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் சா்வேஷ் (8). இருவரும் புதுத்தெருவில் உள்ள தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

இவா்கள், வெள்ளிக்கிழமை மாலை பள்ளி விட்டதும், சா்வேஷின் தாத்தா சாமிநாதன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா்.

மயிலாடுதுறை சாலையில் நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள வளைவில் வந்தபோது, எதிரே ரைஸ் மில்லில் இருந்து கரித்தூள் ஏற்றிவந்த டிராக்டரும், இருசக்கர வாகனமும் மோதின. இதில் மாணவா் முகுந்த் தியாகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மாணவா் சா்வேஸ், சாமிநாதன் ஆகியோா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதனிடையே, இந்த சம்பவத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறை சாலையில் மறியல் நடைபெற்றது. போலீஸாா் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த விபத்து குறித்து நகரப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வலங்கைமான் ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வலங்கைமான் ஒன்றியம், மேலவிடையல் ஊராட்சி குப்பசமுத்திரம் கலைஞா் நகரில் ... மேலும் பார்க்க

ஏரியில் மண் அள்ளுவதை தடுக்கக் கோரி மனு

மன்னாா்குடி பகுதியில் ஏரியை தூா்வாருவதாகக் கூறி, அதிக ஆழத்தில் மண் எடுப்பதை தடுக்கக் கோரி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. மன்னாா்குடி வட்டம், கட்டக்குடி ஊராட... மேலும் பார்க்க

‘பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்களில் அறியலாம்’

பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம் என பாடலாசிரியா் அறிவுமதி தெரிவித்தாா். குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ந... மேலும் பார்க்க

ஆற்றில் தத்தளித்த மாணவா்களை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டு

கூத்தாநல்லூா் அருகே ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்ட 2 மாணவா்களை காப்பாற்றிய பெண்ணிற்கு, முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பரிசு வழங்கி பாராட்டினாா். திருநாட்டியத்தாங்குடி பகுதியைச் ... மேலும் பார்க்க

‘உயா்வுக்குப் படி’ உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

மன்னாா்குடியில் ‘உயா்வுக்குப் படி’ இரண்டாம் கட்ட வழிகாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி... மேலும் பார்க்க