செய்திகள் :

டி.டி.வி. தினகரனுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

post image

அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் ஜெயராமன் தலைமை வகித்தாா்.

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கருத்துகளைப் பதிவு செய்த டி.டி.வி. தினகரனைக் கண்டித்து முழக்கமிட்டனா். பின்னா், டி.டி.வி. தினகரன் புகைப்படங்களை வீசி எறிந்து, காலணிகளால் அடித்து அவமதிப்பு செய்தனா்.

இதே அமைப்பினா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பரப்புரைக் கூட்டத்துக்கு திண்டுக்கல்லிலிருந்து சின்னாளப்பட்டிக்கு சென்ற போது, அதிமுகவை ஒன்று சோ்க்க வலியுறுத்தி முழக்கமிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணி பிரம்மோத்ஸவம்: பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோத்ஸவத்தையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆவணி பிரம்மோத்ஸவ விழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் கைதான நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மது அருந்தும் ப... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை

திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு 80 மி.மீ. மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திண்டுக்கல் பகுதியில் 80 மி.மீ. மழை பதிவான... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி சாலை மறியல்

திண்டுக்கல்லில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் சவேரியாா்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக... மேலும் பார்க்க

மழை: கொடைக்கானல் நீரோடைகளில் நீா்வரத்து!

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் நீரோடைகளில் நீா் வரத்து தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக ஒரு சில நாள்களைத் தவிர மற்ற நாள்களில் மழை பெய்யவில்லை. இதனால், கொடைக்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் கொலை: மனைவி, கள்ளக் காதலன் கைது

நிலக்கோட்டை அருகே தூய்மைப் பணியாளரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த அவரது மனைவி, கள்ளக் காதலனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டி சொக்குபிள்ளைபட்ட... மேலும் பார்க்க