செய்திகள் :

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 4 பேருக்கு இடம்!

post image

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. மலேசியாவில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வென்றது.

இதையும் படிக்க: சஞ்சு சாம்சனுக்கு காயம்; மீண்டும் அணியில் இடம்பெறுவாரா?

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணி

மலேசியாவில் நடைபெற்று வந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி அறிவித்துள்ள இந்த அணியில் 4 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த டி20 தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகி விருதினை வென்ற கொங்கடி த்ரிஷா உள்பட 4 வீராங்கனைகள் சிறந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். கொங்கடி த்ரிஷாவை தவிர்த்து, கமலினி, வைஷ்ணவி சர்மா மற்றும் ஆயுஷி சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிக்க: டி20 போட்டிகளில் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறோம்: கௌதம் கம்பீர்

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணி விவரம்

கொங்கடி த்ரிஷா, ஜெம்மா போத்தா, டேவினா பெர்ரின், கமலினி, கயோம் பிரே, பூஜா மஹாட்டோ, காய்லா ரேனெக், கேட்டி ஜோன்ஸ், ஆயுஷி சுக்லா, சமோடி பிரபோதா, வைஷ்ணவி சர்மா மற்றும் தபிஷெங் நினி.

அபிஷேக் சர்மா இன்னும் அதிகமாக பந்துவீச வேண்டும்; முன்னாள் இந்திய வீரர் வலியுறுத்தல்!

அபிஷேக் சர்மா இன்னும் அதிகமான ஓவர்கள் பந்துவீச வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்ட... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கான போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை தொடக்கம்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. போட்டிகள் ... மேலும் பார்க்க

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் கிறிஸ் கெயில்!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் விளையாடவுள்ளார்.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி மார்ச் ... மேலும் பார்க்க

சஞ்சு சாம்சனுக்கு காயம்; மீண்டும் அணியில் இடம்பெறுவாரா?

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் (பிப்ரவரி 2) நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்ட... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறோம்: கௌதம் கம்பீர்

டி20 போட்டிகளில் இந்திய அணி அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புவதாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் (பிப்ரவரி ... மேலும் பார்க்க

அபிஷேக் சர்மாவுக்கு ஜோஸ் பட்லர் பாராட்டு!

இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மாவை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத... மேலும் பார்க்க