செய்திகள் :

டென்னிஸ் ராக்கெட் இழைநார்களினால் தோல்வி..! எம்மா ரடுகானு விரக்தி!

post image

புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் மூன்றாவது சுற்றில் தோல்வியுற தனது டென்னிஸ் - ராக்கெட்டின் இழைநார்கள் (strings) கோளாறாக இருந்தது ஒரு காரணம் என எம்மா ரடுகானு கூறியுள்ளார்.

மகளிர் ஓபன் பிரிவில் 3-ஆவது சுற்றில் உலகின் நம்.1 வீராங்கனையாக சபலென்காவும் இங்கிலாந்தின் நம்.1 வீராங்கனை எம்மா ரடுகானுவும் மேல்தளம் மூடப்பட்ட சென்டர் கோர்ட்டில் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் சபலென்கா 7-6 (6) 6-4 என த்ரில் வெற்றி பெற்றார்.

இதில் எம்மா ரடுகானு தோல்வியுற்றாலும் பெரும்பாலும் வெற்றிபெறும் இடத்திலிருந்து சில மில்லி மீட்டர்களில் தோல்வியுற்றார். இந்தத் தோல்வி குறித்து எம்மா ரடுகானு பேசியதாவது:

இறுக்கமான இழைநார்களினால் விரக்தியடைந்தேன்

பந்துகள் அதிகமாக பறந்ததாக உணர்ந்தேன். எனது அனைத்து டென்னிஸ் ராக்கெட்டுகளும் போட்டிக்காக புதியதாக இழைநார்களை பின்னக் கொடுத்திருந்தேன்.

ராக்கெட்டில் இழைநார்கள் இறுக்கமாக பின்னப்பட்டதாதயார் செய்யப்பட்டிருந்தது. அது இந்தப் போட்டிக்கு முற்றிலும் வித்தியாசமாக அமைந்துவிட்டது.

திடலில் கூரை மூடப்பட்டிருந்ததால் அப்படி மாறியிருக்கலாம். நான் 2 ராக்கெட்டுகளின் கம்பிகளை தளர்வாக அமைக்கும்படி அனுப்பினேன்.

அவர்கள் அதை மாற்றுவதற்கு 20 நிமிடங்கள் ஆகின. இருந்தும் எனக்கு கடினமாக இருந்தது. எனக்கு இதெல்லாம் விரக்தியை உண்டாக்கியது. ஆனால், எனக்கு வேறு வழியில்லை. நான் சரியாக விளையாடியிருக்க வேண்டும் என்றார்.

Emma Raducanu of Britain waves as she leaves the court after losing to Aryna Sabalenka.
பார்வையாளர்களின் பாராட்டில் எம்மா ரடுகானு...

எம்மா ரடுகானுவின் சிறப்பான ஆட்டத்துக்கு திடலில் இருந்த அனைவருமே எழுந்து நின்று கைதட்டினார்கள்.

Emma Raducanu expressed frustration with having to get a couple of her rackets re-strung during her third-round loss to top-ranked Aryna Sabalenka at Wimbledon.

நீரஜ் சோப்ரா சாம்பியன்

இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, தாம் முதல் முறையாக நடத்திய நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் ஆனாா்.பெங்களூரில் உள்ள ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந... மேலும் பார்க்க

அரையிறுதிக்கு முன்னேறியது செல்ஸி

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் செல்ஸி 2-1 கோல் கணக்கில் பல்மெய்ராஸை சனிக்கிழமை சாய்த்தது.இந்த ஆட்டத்தில் முதலில் செல்ஸி தரப்பில் கோல் பால்மா் 16-ஆவது நிமிஷ... மேலும் பார்க்க

ரேப்பிட் பிரிவில் குகேஷ் வெற்றி

குரோஷியாவில் நடைபெறும் சூப்பா் யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், ரேப்பிட் பிரிவின் முடிவில் இந்தியாவின் டி.குகேஷ் வெற்றி பெற்றாா்.நடப்பு உலக சாம்பியனான குகேஷ், கடைசி சுற்றில் அமெரிக்கா... மேலும் பார்க்க

அரையிறுதியில் ஸ்ரீகாந்த்

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா்.ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் அவா், 21-18, 21-19 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில... மேலும் பார்க்க

ஆசிய கால்பந்து: இந்தியா தகுதி

மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 2-1 கோல் கணக்கில் தாய்லாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.இந்த வெற்றியின் மூலமாக, தகுதிச்சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் (4) வெ... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சபலென்கா, ஆண்ட்ரீவா

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், முன்னணி வீராங்கனைகளான பெலாரஸின் அரினா சபலென்கா, ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினா். மகளிா் ஒற்றையா... மேலும் பார்க்க