செய்திகள் :

ட்ரம்ப் ஹோட்டல் வாடகை திட்டத்தில் முதலீடு; 5 லட்சம் இழந்த வழக்கறிஞர் - எப்படி நடந்தது சைபர் மோசடி?

post image

"டொனால்ட் ட்ரம்ப் ஹோட்டல் வாடகை" நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகமான வருமானம் கிடைக்கும் என்று யூடியூப்பில் வீடியோ பார்த்து சைபர் வலையில் கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சிக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது. எப்படி நடந்தது இந்த சைபர் மோசடி?

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிக வருமானம் தருவதாக உறுதியளிப்பதாக, AI உருவாக்கிய வீடியோவை பயன்படுத்தி, ”ட்ரம்ப் ஹோட்டல் வாடகை” திட்டத்தில் முதலீடு செய்யுமாறு வழக்கறிஞர் ஒருவரை சைபர் குற்றவாளிகள் ஏமாற்றியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதாவது ட்ரம்ப் ஹோட்டல் வாடகை நிறுவனத்தில் முதலீடு வாய்ப்பை வழங்கும் ஒரு வீடியோவை யூடியூப்பில் வழக்கறிஞர் பார்த்துள்ளார்.

cyber crime

இதன்படி அதில் வந்த லிங்கை கிளிக் செய்து மொபைலில் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதில் அறிவுறுத்தப்பட்டதன்படி அவர் அதில் உள்ள படிவத்தை நிரப்பியுள்ளார். தனது வங்கி கணக்கு விவரங்கள் உட்பட அனைத்தையும் அதில் சமர்ப்பித்துள்ளார்.

மேலும் இந்த கணக்கை செயல்படுத்த 1,500 ரூபாய் தனது பணத்தை செலுத்தி உள்ளார். அவரது முதலீட்டில் தினசரி மூன்று சதவீதம் வருமானம் வரும் என்று அவருக்கு குறிப்பிடப்பட்டுள்ளது ஆரம்பத்தில் தனது முதலீடுகளில் வருமானம் பெற்று வந்த அவர் பின்னர் வருமானம் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 25 முதல் ஏப்ரல் நான்கு வரை பல்வேறு வங்கி கணக்கு யுபிஐடிகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கிட்டத்தட்ட 5 லட்சத்து 93,240 ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். இந்த பணம் அனைத்தும் இரட்டிப்பாகும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்ததாக வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 318(4) (மோசடி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் போது, ​​புகார்தாரர் 'போலி' இணைப்பு மூலம் ஏமாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1.5 லட்சம் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அன... மேலும் பார்க்க

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க