முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
ட்ரம்ப் ஹோட்டல் வாடகை திட்டத்தில் முதலீடு; 5 லட்சம் இழந்த வழக்கறிஞர் - எப்படி நடந்தது சைபர் மோசடி?
"டொனால்ட் ட்ரம்ப் ஹோட்டல் வாடகை" நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகமான வருமானம் கிடைக்கும் என்று யூடியூப்பில் வீடியோ பார்த்து சைபர் வலையில் கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சிக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது. எப்படி நடந்தது இந்த சைபர் மோசடி?
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிக வருமானம் தருவதாக உறுதியளிப்பதாக, AI உருவாக்கிய வீடியோவை பயன்படுத்தி, ”ட்ரம்ப் ஹோட்டல் வாடகை” திட்டத்தில் முதலீடு செய்யுமாறு வழக்கறிஞர் ஒருவரை சைபர் குற்றவாளிகள் ஏமாற்றியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அதாவது ட்ரம்ப் ஹோட்டல் வாடகை நிறுவனத்தில் முதலீடு வாய்ப்பை வழங்கும் ஒரு வீடியோவை யூடியூப்பில் வழக்கறிஞர் பார்த்துள்ளார்.

இதன்படி அதில் வந்த லிங்கை கிளிக் செய்து மொபைலில் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதில் அறிவுறுத்தப்பட்டதன்படி அவர் அதில் உள்ள படிவத்தை நிரப்பியுள்ளார். தனது வங்கி கணக்கு விவரங்கள் உட்பட அனைத்தையும் அதில் சமர்ப்பித்துள்ளார்.
மேலும் இந்த கணக்கை செயல்படுத்த 1,500 ரூபாய் தனது பணத்தை செலுத்தி உள்ளார். அவரது முதலீட்டில் தினசரி மூன்று சதவீதம் வருமானம் வரும் என்று அவருக்கு குறிப்பிடப்பட்டுள்ளது ஆரம்பத்தில் தனது முதலீடுகளில் வருமானம் பெற்று வந்த அவர் பின்னர் வருமானம் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 25 முதல் ஏப்ரல் நான்கு வரை பல்வேறு வங்கி கணக்கு யுபிஐடிகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கிட்டத்தட்ட 5 லட்சத்து 93,240 ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். இந்த பணம் அனைத்தும் இரட்டிப்பாகும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்ததாக வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 318(4) (மோசடி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
விசாரணையின் போது, புகார்தாரர் 'போலி' இணைப்பு மூலம் ஏமாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1.5 லட்சம் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.