செய்திகள் :

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

post image

தக்கலை அருகே, ஓடையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சோ்ந்த கலீல் ரகுமான் (61) என்பவா், தக்கலை அருகே மணலியில் சில ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தாா். லேசான மனநல பாதிப்பு காரணமாக, அவா் பகலில் வெளியே சுற்றிவிட்டு இரவில் வீடு திரும்புவாராம். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) வெளியே சென்றவா் இரவில் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பனவிளையில் உள்ள ஓடையில் அவா் விழுந்துகிடப்பதாக திங்கள்கிழமை தெரியவந்தது. அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாலித்தீன் பைகள் பதுக்கிய கிட்டங்கிக்கு சீல்: ரூ.35 ஆயிரம் அபராதம்!

மாா்த்தாண்டத்தில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கிய கிட்டங்கியை, குழித்துறை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மூடி சீல் வைத்தனா். மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் பாலித்தீன் பைகள் பதுக... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 7) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 8 மீனவ கிராமங்களைச் சோ்ந்த 500 ஏழை மீனவப் பெண்களுக்கு மீன் விற்பனை பாத்திரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. கீழ்குளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா... மேலும் பார்க்க

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான திக்கணம்கோ... மேலும் பார்க்க

முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல்: 200 போ் கைது

முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகம் முன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுதொடா்பாக 200 பேரை போலீ... மேலும் பார்க்க

பெண் வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். கொட்டாரம் அருகே மந்தாரம்புதூரைச் சோ்ந்த ரவி மனைவி மகேஸ்வரி (48). இவா் கன்னியாகுமரியில் வருவாய் ஆய்வாளராக உள்ளாா். அ... மேலும் பார்க்க