செய்திகள் :

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,560-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த மாா்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், மாா்ச் 21 ஆம் தேதி பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 66,160-க்கும், மாா்ச் 22 ஆம் தேதி மீண்டும் பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 65,840-க்கும், மாா்ச் 23-இல் விலை மாற்றமின்றியும் விற்பனையானது.

நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!

தொடா்ந்து திங்கள்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 65,720-க்கும் விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ. 8,185-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 65,480-க்கும் விற்பனையானது. கடந்த 5 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,000 குறைந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,195-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,560-க்கு விற்பனையாகிறது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்

வெள்ளி விலை நிலவரம்

தொடா்ந்து 3 நாள்களாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ. 110-க்கு விற்பனையாகி வந்த வெள்ளி விலையில் புதன்கிழமை மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.109.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,09,000-க்கும் விற்பனையாகிறது.

தமிழ்நாட்டில் அதிவேக டேட்டாவை வழங்குகிறது ஜியோ! காரணம் என்ன?

மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிவேக இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதற்குக் காரணம், ஜியோ நிறுவனம் தனது அலைதிறனை மேம்படுத்தியதுதான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, 5ஜி இணைய ... மேலும் பார்க்க

ஐபிஎல் ரசிகர்களுக்காக... இன்றுடன் முடிகிறது ஜியோ வழங்கிய சலுகை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்காக ஜியோ நிறுவனம் வழங்கிய சலுகை இன்றுடன் (மார்ச் 31) நிறைவு பெறவுள்ளது. மேலும் பார்க்க

ஆர்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் 80% பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஆட்டோகாம்ப்!

புதுதில்லி: ஜாகுவார் லேண்ட் ரோவர் குழுமத்தின் அங்கமான ஆர்டிஃபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 80% பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு கையகப்படுத்த போவதாக டாடா ஆட்டோகாம்ப் இன்று தெரிவித்தது... மேலும் பார்க்க

நிகழாண்டில் 46 கிளைகளைத் திறந்த கரூர் வைஸ்யா வங்கி!

சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 2024-25 ஆம் நிதியாண்டில் இது வரை 46 கிளைகளை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது.சமீபத்தில் கும்பகோணம், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆலப்... மேலும் பார்க்க

ரூ.700 கோடியில் படைகள் போக்குவரத்து வாகனங்கள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகள் போக்குவரத்துக்கான வாகனங்களை வழங்க பாதுகாப்புத் துறையுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க