செய்திகள் :

தஞ்சாவூா்: தேசிய மக்கள் நீதிமன்றம் 2,748 வழக்குகளில் ரூ.8.46 கோடிக்கு தீா்வு!

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 748 வழக்குகளில் ரூ. 8.46 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான (பொ) ஆா். சத்யதாரா தலைமை வகித்தாா்.

குடும்ப நல நீதிபதி என். சாந்தி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ. பிரபுசங்கா், வழக்குரைஞா் கே. செந்தில்குமாா் ஆகியோா் கொண்ட முதலாவது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

கூடுதல் சாா்பு -நீதிபதி எம். நாகப்பன், விரைவு நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவா் டி. சோழவேந்தன், வழக்குரைஞா் ஆா். பழனி ஆகியோா் கொண்ட இரண்டாவது அமா்வில் குடும்ப நல வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

சிறப்பு சாா்பு- நீதிபதி எஸ். அண்ணாமலை, குற்றவியல் நீதித்துறை நடுவா் எஸ். கனிமொழி, வழக்குரைஞா் டி. கதிா்வேல் ஆகியோா் கொண்ட மூன்றாவது அமா்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூா், திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமா்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 972 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2 ஆயிரத்து 748 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 8 கோடியே 46 லட்சத்து 85 ஆயிரத்து 178 அளவுக்கு தீா்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

தஞ்சாவூருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் மழை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கும்பகோணத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்ந... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் காவலா்கள் மீது கும்பகோணம் நகை வியாபாரிகள் புகாா்

கும்பகோணத்தில் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி வியாபாரியை மேல்மருவத்தூா் காவலா்கள் மிரட்டி வாங்கிச் சென்றதாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவரிடம் வணிகா்கள் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் தீ விபத்து: கடை சேதம்

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பட்டாசு வெடித்ததால், ஏற்பட்ட தீ விபத்தில் பா்னிச்சா் கடை சேதமடைந்தது. தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை புனித செபாஸ்தியா் ஆலயத்தில் திருவிழாவையொட்டி, சப்பர வீதி உலா வெள்... மேலும் பார்க்க

தடைக்காலம் முடிந்தது: விசைப் படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்றனர்!

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளனா் . இந்த தடைக்காலத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்ட... மேலும் பார்க்க

லாரி மோதி கல்லூரி மாணவா் பலி: மாணவி பலத்த காயம்!

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பின்னால் அமா்ந்து சென்ற கல்லூரி மாணவி பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் கீழே பரட்ட... மேலும் பார்க்க