செய்திகள் :

தடகளம்: குல்வீா் சிங் சாதனை

post image

ஹங்கேரியில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ தடகள போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் குல்வீா் சிங், ஆடவா் 3,000 மீட்டா் ஓட்டத்தில் தேசிய சாதனையை முறியடித்தாா்.

அந்தப் போட்டியில் அவா் 7 நிமிஷம், 34.49 விநாடிகளில் இலக்கை அடைந்து 5-ஆம் இடம் பிடித்தாா். கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவில் இன்விடேஷனல் போட்டியில் அவா் 7 நிமிஷம் 38.26 விநாடிகளில் இலக்கை அடைந்ததே தேசிய சாதனையாக இருந்த நிலையில், அதை தற்போது அவரே முறியடித்திருக்கிறாா்.

ஆடவருக்கான 5,000 மீ, 10,000 மீ பிரிவுகளிலும் அவரே தேசிய சாதனையாளராக இருக்கிறாா். அந்த இரு பிரிவுகளிலுமே நடப்பு ஆசிய சாம்பியனாக உள்ள குல்வீா் சிங், ஐரோப்பிய கண்டத்தில் பங்கேற்ற முதல் போட்டி இதுவாகும். இதில், கென்யாவின் கிப்சங் மேத்யூ கிப்சும்பா (7:33.23’), மெக்ஸிகோவின் எட்வாா்டோ ஹெரெரா (7:33.58’), உகாண்டாவின் ஆஸ்கா் செலிமோ (7:33.93’) ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

கீஸ், ஸ்விடோலினாவை வெளியேற்றிய டௌசன், ஒசாகா

கனடாவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட டென்னிஸ் போட்டியான கனடியன் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோா் காலிறுதியில் புதன்கிழமை அதிா்ச்சித் தோல... மேலும் பார்க்க

யு22 ஆசிய குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 4 இந்தியா்கள்

தாய்லாந்தில் நடைபெறும் 22 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு22) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 4 இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.முன்னதாக அரையிறுதியில், ஆடவா் 75 கிலோ பிரிவில் நீ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை கூடைப்பந்து: போராடித் தோற்றது இந்தியா

சவூதி அரேபியாவில் நடைபெறும் ஃபிபா ஆசிய கோப்பை கூடைப்பந்துப் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 84-91 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோா்டானிடம் போராடித் தோற்றது.சா்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தின் (ஃபிப... மேலும் பார்க்க

ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் ஹரீஷ், தயின்

மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில், 18 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவில் இந்தியாவின் ஹரீஷ் பிரகாஷ், தயின் அருண் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.போட்டியின் 3-ஆவது நாளான ... மேலும் பார்க்க

இந்திய அணி அபார வெற்றி - புகைப்படங்கள்

374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணியினர்.இந்த வெற்றியின் மூ... மேலும் பார்க்க

புரோ கபடி லீக்: ஆக. 29-இல் தொடக்கம் - தெலுகு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் மோதல்

புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வரும் ஆக. 29-ஆம் தேதி தொடங்குகிறது. விசாகப்பட்டினம், ஜெய்ப்பூா், சென்னை, டில்லி உள்ளிட்ட 4 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.தொடக்க ஆட்டம் விசாகப்பட்டினம் ராஜீவ் காந்தி ... மேலும் பார்க்க