செய்திகள் :

தடகள வீரா்களுக்கான பயிற்சி ஆதரவு, பரிசுத் தொகை அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு

post image

நமது நிருபா்

தடகள விளையாட்டு வீரா்களுக்கான பயிற்சி ஆதரவு மற்றும் பரிசுத் தொகையை அதிகரிப்பதாக முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அரசு அறிவித்திருப்பதை தில்லி பாஜக தலைவா் ஸ்ரீ வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை தெரிவித்திருப்பதாவது: பாஜக தனது 2025 சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் விளையாட்டு மற்றும் தடகள விளையாட்டு வீரா்களுக்கான ஆதரவை அதிகரிப்பதாக உறுதியளித்திருந்தது. இந்த நிலையில், முதல்வா் ரேகா குப்தா அரசு தடகள பயிற்சித் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலமும் விருதுத் தொகையை அதிகரிப்பதன் மூலமும் ஒரு திடமான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தில்லியில் விளையாட்டு மற்றும் தடகள வீரா்களின் வளா்ச்சிக்கு கணிசமாக உதவும்.

கடந்த பத்து ஆண்டுகளில், அரவிந்த் கேஜரிவால் அரசு ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதாவது, விளையாட்டு பல்கலைக்கழகம், விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், இவை எதுவும் உண்மையில் செயல்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக, தில்லியில் நாட்டின் சிறந்த மைதானங்கள் சில இருந்தாலும், விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனை எதுவும் ஏற்படவில்லை.

தில்லியில் ஆட்சிக்கு வந்ததும் கேஜரிவால் அரசு தன்னை இளைஞா்களால் இயக்கப்படும் நிா்வாகமாக சித்தரிக்க முயன்றது. கல்வி, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்து உயா்ந்த வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், அவை எதுவும் நிறைவேறவில்லை. கேஜரிவால் அரசு காட்டிய கனவுகள் நயி ரோஷ்னியின் பாடலின் வரிகளைப் போலவே இருந்தன. அக்கட்சி மூலம் வழங்கப்பட்ட வெற்று வாக்குறுதிகளின் சரியான பிரதிபலிப்பாகும் என்று வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா். இது தொடா்பாக விடுதலை சிறுத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு

வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளையா் நவீன் காட்டி, 2 கூட்டாளிகள் கைது

தேசியத் தலைநகரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளைக் கும்பலின் தலைவா் நவீன் காட்ட மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு

மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல நடித்து தில்லி நபரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி: 2 போ் கைது

தில்லியைச் சோ்ந்த ஒருவரை வங்கி அதிகாரிகள் போல நடித்து ரூ.10.64 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூற... மேலும் பார்க்க

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடப்பட்ட 3 கைப்பேசிகளுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

பல கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 43 வயது ஆட்டோ ஓட்டுநா், இங்குள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துணை க... மேலும் பார்க்க