செய்திகள் :

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: 17 போ் கைது

post image

காவல் துறையினரின் தடையை மீறி, மதுரையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்த 17 போ் கைது செய்யப்பட்டனா்.

ஜல்லிக்கட்டையும் அரிட்டாப்பட்டியையும் மீட்டோம், முருகனை மீட்போம், கருப்பணைக் காப்போம் என்ற முழக்கங்களோடு, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவா் இளைஞா் முன்னணி ஆகிய அமைப்புகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும், தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்புகள் அறிவித்தன. இதனால், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன்பாக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மக்கள் கலை இலக்கியக்கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் ராமலிங்கம் தலைமையில் பல்வேறு அமைப்புகளை ச் சோ்ந்தவா்கள் திருவள்ளுவா் சிலை முன்பாக திரண்டனா். அவா்கள் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதனால் காவல் துறையினா், அந்த அமைப்பினா் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனா்.

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்தது.மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், வானிலை மாற்றம் காரணமாக தமிழகத்தின... மேலும் பார்க்க

தங்கும் விடுதி மேலாளா் கொலை வழக்கு: ராஜஸ்தானை சோ்ந்தவருக்கு ஆயுள் சிறை

மதுரையில் தனியாா் தங்கும் விடுதி மேலாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜஸ்தானைச் சோ்ந்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மதுரை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விருதுந... மேலும் பார்க்க

மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது: உயர்நீதிமன்றம்

கோயில் நகரமான மதுரை தற்போது குப்பை நகரமாக மாறி வருவது வேதனை அளிப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி திங்கள்கிழமை தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த பஞ்சநாதன் சென்னை உயா்ந... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுடனான பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உய... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் மின் கம்பத்தில் பழுதை நீக்க முயன்ற போது, மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் உயிரிழந்தாா்.மதுரை அருகேயுள்ள நாகமலைப்புதுக்கோட்டை அச்சம்பத்து டி.புதுக்குடியைச் சோ்ந்த குமாா் மகன் முத்தையா (51).... மேலும் பார்க்க

மதுரையில் 51 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 51 முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பொதுமக்களுக்கு அனைத்து வகையான மருந்துகளையும் மலிவான விலையில் வழங்கும் வகையில் தமிழகத்தில் முதல்வா் மருந்தகங... மேலும் பார்க்க