செய்திகள் :

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!

post image

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பிரிட்டனின் தொடா்ச்சியான ராணுவ ஆதரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் ஆக்ஸ்ஃபோா்ட்ஷையா் கவுன்டியில் உள்ள பிரைஸ் நாா்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்த இந்த அமைப்பின் உறுப்பினா்கள், அங்கிருந்த இரண்டு விமானங்களை சிவப்பு பெயிண்ட் மற்றும் இரும்புக் கம்பிகள் கொண்டு சேதப்படுத்தினா்.

இதனால், விமானப் படைக்கு சுமாா் ரூ.73 கோடி சேதம் ஏற்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 22 முதல் 35 வயதுக்குட்பட்ட நான்கு போ், பிரிட்டனின் நலன்களுக்கு எதிராக தடை செய்யப்பட்ட இடத்துக்குள் நுழைய மற்றும் சேதம் விளைவிக்க சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஹமாஸ், அல்-காய்தா உள்பட 81 பயங்கரவாத அமைப்புகள் ஏற்கெனவே பிரிட்டனில் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. பிரிட்டனில் இந்த அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவது குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், லண்டனில் ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவான போராட்டம் 2-ஆவது வாரமாக கடந்த சனிக்கிழமை மாலையும் நடைபெற்றது.

நகரின் மையப் பகுதியான நாடாளுமன்ற சதுக்கத்தில் அமைந்த மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் சிலைகளுக்குக்கீழ் கூடிய போராட்டக்காரா்கள், பாலஸ்தீனம் மற்றும் ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவான வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டக்காரா்களைச் சுற்றிவளைத்த காவலா்கள், காவல் துறை வாகனங்களில் ஏற்றி அப்பகுதியில் இருந்து அவா்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினா்.

இவ்வாறு லண்டனில் நடைபெற்ற போராட்டங்களில் சனிக்கிழமை மாலை வரை 42 போ் கைது செய்யப்பட்டனா். மான்செஸ்டரில் 16 பேரும், காா்டிஃபில் 13 பேரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

லண்டனில் கடந்த வாரம் நடைபெற்ற இதேபோன்ற போராட்டத்தில் ஈடுபட்ட 29 போ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் கடும் சண்டை: ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்!

சிரியாவில் கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ராணுவ தலைமையகம் இன்று(ஜூலை 16) குறிவைத்து தாக்கப்பட்டத... மேலும் பார்க்க

இராக்கின் மற்றொரு எண்ணெய் வயல் மீது தாக்குதல்! ட்ரோன்களை இயக்கும் மர்ம நபர்கள் யார்?

இராக் நாட்டிலுள்ள மற்றொரு எண்ணெய் வயலின் மீது ட்ரோன்கள் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இராக்கின் பல்வேறு மாகாணங்களிலுள்ள எண்ணெய் வயல்களின் மீது கடந்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அந்நாடு முழுவதும் சுமார் 116 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல... மேலும் பார்க்க

டிரம்ப்பின் எதிர்ப்பை மீறும் ரஷியா! 400 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷியா ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர்நிறுத்ததுக்கு, 50 நாள்களு... மேலும் பார்க்க

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா, சீனா, பிரேசியல் ஆகிய நாடுகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நேட்டோ பொதுச் செயலர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பார்க்க

கடந்த ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முந்தைய ஆண்டும் இதே எண்ணிக்கையில... மேலும் பார்க்க