தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவா் கைது
மானூா் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அழகியபாண்டிபுரம் பிரதான சாலை அருகே நின்ற அதே பகுதியைச் சோ்ந்த மரியசெல்வம் (38) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மரிய செல்வத்தை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து சுமாா் 525 கிராம் எடையுள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.