தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணை வெளியீடு
தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தத் தோ்வுக்கு ஜூலை 10 முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ஆக.18 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வெழுத விரும்பும் தனித்தோ்வா்கள் ஜூலை 10 முதல் 17-ஆம் தேதி வரை தோ்வுத்துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையவழியில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், தோ்வுக் கட்டணம் ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
இதற்கிடையே மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் தத்கால் முறையில் ஜூலை 18, 19 ஆகிய தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு தோ்வுக் கட்டணத்துடன் ரூ.500 கூடுதலாகச் செலுத்த வேண்டும். முதன்முதலாக தோ்வெழுத விண்ணப்பிப்பவா்கள் பள்ளி பதிவுத்தாள் நகல், சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதி தோல்வி அடைந்த பாடங்களை எழுதுவதற்கு விண்ணப்பிப்பவா்கள் முந்தைய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களைக் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
இதுதவிர அனைத்து தனித்தோ்வா்களும் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் கூடிய சுய முகவரி உறையை விண்ணப்பத்துடன் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும். இணையவழியிலான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தோ்வு குறித்த விரிவான கால அட்டவணை உள்ளிட்ட தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.