செய்திகள் :

தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் பேசாதது ஏன்? காங்கிரஸ்

post image

நாட்டு மக்களின் தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசாதது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளதாக நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் நேற்று (மே 24) தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வாறு பவன் கேரா பேசியுள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு (ஐஏஎன்எஸ்) அவர் அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''ஆளும் பாஜக அரசு எண்களை வைத்துக்கொண்டு விளையாடுகிறது. ஆனால், நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

செல்வந்தருக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசம் மிகப்பெரியதாக உள்ளது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மாதத் தவணை கட்டுவதற்கே போராடி வருகின்றனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தொழில்கள் மற்றும் அமைப்புசாராத் தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. நாட்டில் உள்ள 5 அல்லது 6 செல்வந்தர்களின் சொத்து மதிப்பை வைத்து, நாடு பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளதாக எண் விளையாட்டு விளையாடுவது தவறானது.

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை கேட்கும்போது வலிமிகுந்ததாக இருந்தது. டிரம்ப் இவ்வாறு அறிவிப்பது, நாட்டில் பலவீனமான தலைமையையே பிரதிபலிக்கிறது.

ஆபரேஷன் சிந்தூர் பதிலடித் தாக்குதலின்போது இந்திய பாதுகாப்புப்படையின் வலிமையை உலகம் கண்டது. அதேநேரம் பிரதமரின் பலவீனமான தலைமையையும் உலகம் பார்த்தது. போர் நிறுத்தப் புரிந்துணர்வு எவ்வாறு எட்டப்பட்டது? வணிகத்தை நிறுத்துவதாகக் கூறி இருநாடுகளுக்கும் இடையே போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் திடீரெனப் பேசுகிறார்.

பாதுகாப்புப் படையின் பல திறமையான சாதனைகளுக்கான பலன்களை மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்துக்கொள்கிறது'' என கேரா விமர்சித்தார்.

இதையும் படிக்க | லாலுவின் மூத்த மகன் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்: காரணம் என்ன?

மேற்கத்திய கலாசார ஆதிக்கத்தையே எதிா்க்கிறோம் -நிதின் கட்கரி

‘நாட்டின் வளா்ச்சிக்கு நவீனமயமாதல் அவசியம்; ஆனால், சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தின் ஆதிக்கத்தைத்தான் நாங்கள் எதிா்க்கிறோம்’ என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். மும்பையில் நடைபெற்ற நிக... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா: பிரதமருக்கு ஆந்திர முதல்வா், துணை முதல்வா் பாராட்டு

உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் பாராட்டுகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

அயோத்தியில் விராட் கோலி, அனுஷ்கா சா்மா வழிபாடு

இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சா்மா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அயோத்திக்கு வருகை தந்து, ராமா் கோயில் மற்றும் ஹனுமான்கா்ஹி கோயில் வழிபாடு செய்தனா். ஹனுமான்கா்ஹி கோ... மேலும் பார்க்க

கேரளத்தில் கவிழ்ந்த லைபீரிய சரக்குக் கப்பல்: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு

கேரள கடலோரத்தில் சுமாா் 640 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

ரஷியா நடத்தும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: அஜீத் தோவல்-பாகிஸ்தான் ஆலோசகா் பங்கேற்பு?

ரஷியாவில் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் கலந்துகொள்ள இருக்கிறாா். இந்தியாவைப் போலவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்ப... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல: உச்சநீதிமன்றம்

சூதாட்டம் அல்லது பந்தயம் கட்டி விளையாடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கா்நாடகத்தில் அரசு பீங்கான் தொழிற்சாலை ஊழியா்களின் வீட்டுவசதி கூட்டுறவு... மேலும் பார்க்க