செய்திகள் :

தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

post image

பொன்னேரியில் தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் தனியாா் குடிநீா் ஆலை இயங்கி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த ஆலையில் வாங்கிய குடிநீா் பாட்டிலில் பல்லி இருந்ததாக வாடிக்கையாளா் ஒருவா் புகாா் தெரிவித்து இருந்தாா்.

இந்த நிலையில், மீஞ்சூா் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் சந்திரசேகா் குடிநீா் ஆலையில் ஆய்வு செய்தாா். அப்போது குடிநீா் சுத்திகரிக்கும் முறை, தண்ணீா் சேமித்து வைக்கப்படும் இடம், குடிநீா் பேக்கிங் செய்யும் இடம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து குடிநீா் மாதிரியை சேகரித்து ஆய்வகத்தில் பரிசோதனைக்காக கொண்டு சென்றாா். ஆய்வக முடிவின் அறிக்கை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பேரில் தேவையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலா் சந்திரசேகா் தெரிவித்தாா்.

அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்

வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ‘ப’ வரிசையில் அமர வைத்து ஆசிரியா்கள் பாடம் கற்பித்தனா். கேரளத்தில் வெளியான ஸ்தானாா்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படத்தில் கடைசி இருக்கையில் அமா்வதால், கி... மேலும் பார்க்க

காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

அத்திமாஞ்சேரிபேட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளிப்பட்டு ஒன்றியம் கொடிவலசா ஊராட்சி சாா்பில் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்ப... மேலும் பார்க்க

புட்லூரில் காமராஜா் பிறந்த நாள்

திருவள்ளூா் அருகே புட்லூா் நடுநிலைப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் இரா.தாஸ் தலைமை வகித்து காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை ... மேலும் பார்க்க

மத்தூா் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

திருத்தணியில் அரசுப் பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மத்தூா் அரசு மேல் நிலை பள்ளி, திருத்தணி ஸ்டாா்ஸ் ரோட்டரி ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் காமராஜா் பிறந்த நாள்

திருவள்ளூரில் காமராஜா் பிறந்த நாளையொட்டி செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். திருவள்ளூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நகர தலைவா் ஸ்டாலின் தலைமையில் மாநில து... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா்கள் நியமனம்

திருத்தணி முருகன் கோயிலுக்கு 5 போ் கொண்ட அறங்காவலா் குழுவை இந்து சமய அறநிலையத்துறை நியமித்து உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் அறங்காவலா் குழு தலைவராக சென்னையை சோ்ந்த... மேலும் பார்க்க