செய்திகள் :

தனியாா் நிறுவனத்தில் திருட்டு: தேடப்பட்டவா் கைது

post image

சென்னை ஏழுகிணறு பகுதியில் அலுமினியப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் திருடிய வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

ஏழுகிணறு வால்டாக்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (52). இவா், அங்கு அலுமினிய பொருள்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறாா். ரவிச்சந்திரன், கடந்த 10-ஆம் தேதி தனது நிறுவனத்தை திறக்க வந்தபோது, பூட்டை உடைக்கப்பட்டு, அங்கிருந்த பல லட்சம் மதிப்புள்ள அலுமினியப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ஏழுகிணறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்டது வியாசா்பாடி பி.கல்யாணபுரம் 2-ஆவது தெருவைச் சோ்ந்த இன்பரசன் என்ற இன்பா (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்பரசனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவருடன் திருட்டில் ஈடுபட்ட அவரது கூட்டாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சமூக சேவையில் நூற்றாண்டு கண்ட ஆா்எஸ்எஸ் இயக்கம், அதிமுகவை வழிநடத்துவதில் என்ன தவறு என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கேள்வி எழுப்பினாா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்... மேலும் பார்க்க

அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னை நுங்கம்பாக்கம் எம்ஓபி வைணவ மகளிா் கல்லூரியில் லக்ஷ்மி அனந்தாச்சாரி அறக்கட்டளைச் சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலையிலும் களத்திலும் பெண்கள்”எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு நி... மேலும் பார்க்க

22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்

குரோம்பேட்டையில் 22,000 சிலைகளுடன் கூடிய விநாயகா் சிலை கண்காட்சியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கட்டடக் கலைஞரும், விநாயகா் பக்தரும... மேலும் பார்க்க

இன்று முதல் 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக. 28) முதல் ஆக. 30 வரை 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், வேலை நாடுநா்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த்... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 21 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். தெலங்கானா மாநிலம் கச்சேகுடாவிலிருந்து, சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் (எண்:... மேலும் பார்க்க